15 June 2013

என் மனதில் உள்ள வலி மட்டும் அல்ல என்னை போல் உள்ள அனைத்து பெண்களின் வலி இது


# படித்ததில் பிடித்தது #

என் மனதில் உள்ள வலி மட்டும் அல்ல என்னை போல் உள்ள அனைத்து பெண்களின் வலி இது '

எனக்கு நடக்க தெரிந்தவுடம் என் கை பிடிப்பதில்லை நீ !

உண்ணத் தெரிந்தவுடன் எனக்கு உணவூட்டி விடுவதில்லை நீ !

பதிமூணு வயது பூர்த்தி ஆனாதில் இருந்து எனக்கு முத்தம் கொடுப்பதில்லை நீ !

பூப்யெய்தவுடன் என்னை மடியில் வைத்து கொஞ்சுவதில்லை நீ !

இருவது வயது வந்ததும் என்னை தொட்டி பேசுவதில்லை நீ !

திருமணம் ஆனா பின் என்னிடம் பேசுவதே இல்லை நீ !

சிறுவயது முதல் அப்பாவின் செல்ல மகள்..!

இந்த காலாச்சாரம், பெண்மை இரண்டுமே தந்தை மகளின் உறவை கானல் நீர் போல் தூரத்தில் நின்றே பார்க்கச் சொல்கிறது.

திருமணத்தன்று உன்னை விட்டு செல்ல போகிறேன் என்ற துக்கத்தில் உன்னை கட்டி அணைக்க நினைத்தேன், ஆனால் நம் காலாச்சாரம் என்ன ஆசைகளை கட்டிப்போட்டு விட்டது.

என் கண்ணுக்கு எட்டிய என் தந்தை என் கைகளுக்கு எட்டவில்லை !
இந்த கலாச்சாரம் வாழ்நாள் முழுவதும் என் ஆசைகளை அழித்துக்கொண்டிருக்கிறது.

-
நந்த மீனாள் 







அஷ்ரஃப் 



No comments:

Post a Comment