பெருநாள் வாழ்த்துகள்...!
உலகெங்கிலும் வன்முறைகள் ஓய்ந்து அன்பும், மகிழ்ச்சியும், சமாதானமும் தழைத்தோங்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.
ரம்ஜான் (ramadan) பற்றி:
இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். மாத இறுதியில் ரம்ஜான் (ramzan festival) பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
துபாய் (dubai) தேராவிலுள்ள ஈத்கானா மைதானத்தில் காலை 6. 20 மணிக்கு ஈத் பெருநாள் தொழுகை நடைபெறுவது வழக்கம். இந்த பெருநாள் தொழுகையில் கடல் அலைகளா? மக்கள் தலைகளா? எனும் அளவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
ஏழை (poor), பணக்காரன் (rich), நாடு (country), மொழி (language) பேதமின்றி மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அல்லாவை நினைத்து தொழுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment