இந்த நேரத்தில தண்ணீர் குடிக்கிறதும் உடலுக்கு ரொம்ப நல்லது. வெயில் காலத்துல தண்ணீர ஜில்லுன்னு குடிக்கணும்தான் ஆசப்படுவோம். அதனால பிரிட்ஜ்ல வைச்சிருக்கிற தண்ணீர், ஜில்லுன்னு வாட்டர் பாக்கெட் போன்றவற்ற குடிக்கிறோம். இது அவ்வளவு நல்லது கிடையாது. பிரிட்ஜ்ல வைச்சிருக்கிற அதிக ஜில் தண்ணிய குடிக்கிறதால ஜலதோஷம் பிடிக்கவும், தலைவலி வரவும் வாய்ப்பிருக்கு.
இதை தவிர்க்க இயற்கையா ஜில்லுன்னு இருக்கும் மண்பானை தண்ணீரை குடிக்கலாம். மண்பானை தண்ணீர் மிதமான குளிர்ச்சியுடனும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நன்மை தரக்கூடியது. பல இடங்கள்ல குழாய் பொருத்திய மண்பானைகள் விற்கப்படுகின்றன. இந்த மண்பானைகளை வாங்கி நாமும் பயன்பெறலாமே.
-அஷ்ரப்

No comments:
Post a Comment