22 October 2013

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு



பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடும் FACEBOOK

$
@$@$@$@$@$@$@$@$@$@$@$@$@$@$@


FACEBOOK
கில் தங்களுக்கு வருகின்ற இஸ்லாம் சம்மந்தமான பல நல்ல விடயங்களை நாங்கள் Like • Comment • Share • Tag செய்வது கிடையாது.ஏன் என்றால்அதை நண்பர்கள் பார்ப்பது கிடையாது.
சரி அவர்கள் பார்க்கவில்லை என்றாலும் நம் கடமை ஏன் என்றால்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "என்னை தொட்டும் ஒரு செய்தி கிடைத்தால் அதை அடுத்தவர்க்கு கூறி விடுங்கள்" எனும் கருத்து பட கூறினார்கள்.

ஆக நமக்கு கிடைக்கின்ற நல்ல விடயங்களை அடுத்தவர்க்கு அனுப்புவது நம் கடமை.

ஆனால் அசிங்கமான சினிமா
பாடல்கள் அருவருப்பான படங்களை எல்லாம் Like • Comment • Share • Tag பண்ணுகிறார்கள் இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள்
அறிவதில்லை.

FACEBOOK
என்பது ஒரு அருமையான சமூக இணையதளம் .
இதன் மூலம் நல்லவற்றையும் தீயவற்றையும் செய்ய முடியும்
.
ஆனால் இதில் செய்யப்படுகின்ற பாவத்துக்கும் நன்மைக்கும்
வட்டிக்கு மேல் குட்டி போடு்ம்.

எப்படி என்றால் உதாரணம் நீங்கள் மாத்திரம் ஒரு சினிமா பாடலை/ பெண்ணின் உருவத்தை பார்க்கின்றீர்கள் என்றால் அதை ஒரு முறை பார்த்ததுக்கான பாவம் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த பாவமான சினிமா பாடலை/பெண்ணின் உருவத்தை
Like • Comment • Share • Tag
செய்யும் போது அதை உங்களது அனைத்து நண்பர்களும் பார்ப்பார்கள். அப்படி அனைவரும் பார்க்கும் போது அந்த பாவத்தை அவர்களும் சுமக்க வேண்டும். பாவத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக அவர்கள் அனைவரது பாவத்தையும் நீங்களும் சுமக்க வேண்டும். உங்களிடம் 1000 நண்பர்கள் இருந்தால் அவர்கள் 1000 பேரின் பாவத்தையும் நீஙகள் சுமக்க வேண்டும். அந்த நண்பர்களில் ஒருவர் Like • Comment • Share • Tag செய்யும் போது அந்த நண்பர்களின் பாவத்தையும் நீங்கள் சுமக்க வேண்டும் இப்படி 1000 ரம் 2000 மாக மாறலாம் ஏன் ஆயிரம் லச்சங்களாகவும் 1000000 மாறலாம்.

பெண்களின் உருவங்களை Profile Picture ஆக வைத்திருக்கும் பெண்களும் தான் ,ஏனென்றால் ஆண்களுக்கு அதை பார்க்க மேடையமைத்து கொடுக்கின்றார்கள்.

'
இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.' (புகாரி)

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

எவர்கள் (இதற்குப்பின்னரும்) விசுவாசிகளுக்கிடையில் இத்தகைய மானக்கேடான வார்த்தைகளைப் பரப்ப விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அல்குர்ஆன் 24:19)

யார் சமூகத்தில் மானக்கேடான விஷயங்களைப் பரப்புவதில் ஈடுபடுகிறாரோ அவரும் அந்தச் செயலை செய்தவரைப் போன்ற பாவியாவார். அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள் ''மானக்கேடானதைப் பேசுபவனும் அதைப் பரப்புபவனும் பாவத்தில் சமமாவார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அநியாயமாக கொலை செய்யப்படக்கூடிய ஒவ்வொரு மனிதனின் கொலையின் பாவத்திலும் ஆதம்(அலை)அவர்களின் முதல் மகன்(காபில்)க்குப் பங்குண்டு ஏனென்றால் அவன் தான் கொலையை
முதலில் ஆரம்பித்து வைத்தான்.
இப்னு மஸ்வூத் (ரலி) - புகாரி,முஸ்லிம்)

அதை போன்றே நன்மையும்
நீங்கள் ஒரு நன்மையான விடயத்தை Like • Comment • Share • Tag செய்யும் போது அதை இவ்வாரு பார்க்கும் அனைவரது நன்மையும்
உங்களுக்கும் கிடைத்து விடும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
யார் இஸ்லாத்தில் நல்ல ஒரு காரியத்தை ஆரம்பிக்கின்றாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும், (அவருக்குப் பின்) செய்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் ஒரு பங்கும் இவருக்கு உண்டு. ஆனால் அவர்களின் நன்மையில் ஏதும் குறைக்கப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

எனவே FACEBOOK மூலம் நல்லவற்றை மட்டும் செய்யுங்கள்.

நன்றி :- Marzook Mohamed Ali



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home