22 September 2014

குர்பானி


குர்பானியை ,,நம் வீட்டுநபர் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள் !
அவ்வளவு காசு என்னிடம் இல்லையே....கடனாக வாங்கணுமே ...
எங்களால் ...இந்த மாதிரி வேலையெல்லாம் பார்ப்பதற்கு ஆள் இல்லையே !
இந்த நொண்டி சாக்கு ,,உங்க மனதில் தோன்றலாம் !
வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ..உடனே டாகடரிடம் போவீர்கள் ..அவர் எடுக்க சொல்லும் எல்லா டெஸ்டும்..எடுப்பீர்கள் !
ஆயிரக்கணக்கில் செலவிடுவீர்கள் ...தானே..?
கூட்டுகுர்பானி க்கு ஒரு இரண்டாயிரம் ரூபாய் கூட இல்லையா ..உங்களிடம் என யோசியுங்கள் !
ரப்பு ,,உங்களின் ,,குர்பானி ,,இறைச்சியை யா...சாப்பிட விரும்புகிறான் !
மற்ற நபிமார்கள் காலத்தில்,,,,நேர்ச்சை வைக்கும் ,குர்பானி பிராணியை ஒரு தனியிடத்தில் வைப்பார்கள் ..பெரும் நெருப்பு வந்து அழித்து செல்லும்...!
நம் உத்தம திருநபிக்கு த்தானே ,,,குர்பானி பிராணியை ...அறுத்து சாப்பிடலாம் ..என்ற மாபெரும் நிஹ்மத்தை வழங்கினான் !
அதற்க்கு நன்றி யுள்ள உம்மத்தாக நாமும் இருக்க வேண்டாமா >.?
ஒரே ஒரு நிமிடம் கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்கள் !
ஆசை ஆசையாய்..பெற்று வளர்த்த உங்கள் பிள்ளையை ...நீங்களே அறுத்து,,,உங்கள் கைகளினால்..அறுத்து,,அல்லாஹ்வுக்கு பலியிடுங்கள் ..என்று உங்களுக்கு கனவில் ரப்பு கட்டளை யே..இட்டாலும்....மனம் துணிந்து செய்வீர்களா ..?
அந்த ஈமான் ..வந்து விடுமா ..?
உற்று உணர்ந்து ,,உங்கள் மனதிடம் கேளுங்கள் !
முடியவே முடியாது அல்லவா...?
பிள்ளையின் தாய்தான் சம்மதிப்பாளா ..?
நீயே..வேண்டாம்...என்று கணவனை தூக்கி எறிந்துவிட்டு..பிள்ளையை தூக்கி கொண்டு ,,மறைந்து வாழ தான் ..முடிவு செய்வாள் ..!
கனவாம்..கனவு ...!அந்த ஆளுக்கு லூஸு..என்று பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ,சேர்த்து ,,சாகும்வரை ,,கிறுக்காக்கி,,வைத்து விடுவாள் ..அந்த தாய் !
இதுதானே நடக்கும் ..?
இந்த தியாகத்தை ,,நினைவு கூறுங்கள் ..என்று கியாம நாள்வரை உள்ள ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கட்டளை இட்டான் ரப்பு !
இதற்க்கு கூலியும் தருவதாக சொல்கிறானே...!
நமக்கு நன்மையை செய்யும்போது கூட ..அதற்க்கு கூலியும் வழங்கும் ரப்பின் கருணையை நினைத்து பார்த்தீர்களா ..?
இந்த தியாகத்தை ,,மனதில் நிறுத்தி,,,குர்பானி கொடுப்பவர்கள்,,,ஹஜ் பிறை பிறக்கு முன்பே ,,நகம் ,முடி எல்லாம் களைந்து ,,மனதில் நிய்யத் வைத்து கொண்டு..(அதாவது ,,தொழுகை,,,,நோன்புக்கு நிய்யத் வைப்பதுபோல் வைக்கணும் ..என்பதும் முக்கியம் !)
பிராணியை நம் உயிருக்கு பகரமாக வாங்குவதால் ..அழகும்,,கம்பீரமும்,,,குறை இல்லாத ...தாயும் பார்த்து ..வாங்கணும் என்பதும் முக்கியம் !
ஏனென்றால் ...நாம் அழகாய் இருக்கணும்,,,குறை இல்லாதவர்களாக இருக்கணும்..என ,,விரும்புவோம் தானே..நம்மை நாமே ..?
அதனால்தான் !
காசு குறைவாக பார்த்தெல்லாம் வத்தல்,,தொத்தலை ,,வாங்காதீர்கள் !
வீட்டில் குறைந்தது மூன்றுநாள் ...வளர்த்து,,தினமும்,,அதை ஆசையுன் நம் பிள்ளைபோல்,,தடவி கொடுத்து,,,நம் கையால் ,,உணவு ஊட்டி ,,,அறுப்பது மிக மிக சிறப்பு !
அதாவது,,ரப்பு எதிர்பார்த்த ,,அந்த மகனையே...தனக்காக,,பலியிடும் ,,நோக்கம் ...கொஞ்சமாவது நிறைவேறும் ...நாம் அன்புடன் ஆசையாக ஒரு பிராணியை வளர்த்து அறுக்கும்போதும்..நம் மனம் ,,அந்த தவிப்பை ,,இப்ராஹீம் நபி ,,ரப்பின் தோழர் ...அனுபவித்த அந்த வலியை ...ஒரே ஒரு சதவீதமாவது ..அனுபவிக்கும் அல்லவா ..?
அதுதான் உண்மையான குர்பானி !



நன்றி:

Shafiyath Qadiriyahஅஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home