8 November 2013

மாநபி வலியுறுத்திய மத நல்லிணக்கம்



இன்றைய உலகில் சமூகங்களுக்கிடையில், மதங்களுக்கு மத்தியில் ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் குறைந்து வேற்றுமையும், சண்டை சச்சரவுகளும் மேலோங்குவதை காணுகிறோம்.எல்லா மதங்களுமே நல்ல பண்புகளையும், வேற்றுமையில் ஒற்றுமையையும், அமைதியான முறையில் வாழும் சூழ் நிலையையுமே போதிக்கிறது.ஆனால் மதத்தின் பெயரில் அமைதியின்மையையும், குழப்பங்களையும் மத வெறியர்கள் உருவாக்குகிறார்கள்.

இந்நிலையில் மத நல்லிணக்கம், மாற்று மதத்தவர்களையும் மதிக்கும் அழகிய பண்புகளைப்பற்றி அல்குர்ஆணின் போதனைகள் அமைந்திருக்க காணலாம். இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் மதினாவில் பல இன மக்களுக்கிடையில் நல்லுறவு, நல்லிணக்கத்தோடு வாழ்ந்து எல்லோரும் அமைதியோடும், சுபிட்சமாகவும் வாழ்ந்திட மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய சரித்திரச்சான்றுகள் யாவை என்பதை சில நிகழ்வுகளின் மூலம் உங்களுக்கு இக்கட்டுரை வாயிலாக சமர்ப்பிக்கிறேன்.

அல்குர்ஆன் 28வது அத்தியாயம் 8வது வசனத்தில் முஸ்லீம்களே உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

அல்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா பிர்று என்ற வார்த்தையை பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யுங்கள் என்பதற்கே பயன்படுத்துகிறான். அந்த வார்த்தையைத் தான் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள் என்ற கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தியுள்ளான். எனவே இவ்வசனத்தின் மூலம் மத நல்லிணக்கத்தையும், மாற்று மதத்தவர்களை மதிப்பதையும் அவசியம் என்பதை இறைவன் தெளிவுபடுத்துவதாக உலக லாவிய அறிஞர் அல்லாமா யூசுப் அல்கர்லாவி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதே கருத்தைதான் கீழ்வரும் வசனங்களின் கருத்துக்களும் உருதிப்படுத்துகிறது. அத்தியாயம் 33-வசனம் -21. அத்தியாயம் 109 –வசனம் – 6.
(
முஸ்லீம்களே!)பிறமதத்தவர்கள்வணங்கக்கூடியவைகளைநீங்கள்திட்டாதீர்கள்.காரணம்அறியாமையினால்அவர்கள்அல்லாஹ்வைதிட்டுவார்கள்.எனவேஅவர்களிடம்உங்களின்அணகுமுறைஇவ்வாறுஇருக்கவேண்டும்.அவர்களிடம் கூறுங்கள்!நீங்கள்வணங்ககூடியவைகளைநாங்கள்வணங்கமாட்டோம்.நாங்கள்வணங்கிடும்இறைனைநீங்களும்வணங்கப்போவதில்லை(எனவே நமக்குள் எவ்வித சண்டை சச்சரவுகளும் தேவையில்லை) உங்கள் மதம் உங்களுக்கு. எங்கள் மார்க்கம் எங்களுக்குஎன்று கூறுவதின் மூலம் சிறந்த மத நல்லிணக்கத்தை அல்குர்ஆன் கற்றுத் தருகிறது.

அல்லாமா யூசுப் அல்கர்ழாவி அவர்கள் தன்னுடைய அல் ஈமான் வல்ஹயாத் என்ற நூலில் கீழ்வரும் வரலாற்றுச் சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள். இஸ்லாமிய உலகின் முதல் கலீபா (ஜனாதிபதி) அபூபக்கர் அவர்களின் ஆட்சி காலத்தில் நடந்த போர் ஒன்றில் முதியவர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்ததை பார்த்த கலீபா அவர்கள் அதை வன்மையாக கண்டித்து போர்க்களத்தில் முதியவர்களையும், பெண்களையும், சிறார்களையும், தாக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா ? இஸ்லாம் தடை செய்த இப்பாதக செயலை செய்தவர் யார் ? என்று கேட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் நம்மையும் விரோதிகள் இவ்வாறு கொலைசெய்யவில்லையா? என்று அச்செயலை நியாயப்படுத்தமுனைந்தார்கள். இதைசெவிமடுத்திய சாந்த குணம் நிரம்பிய கலீபா அவர்களின் முகம் கடும் சினத்தால் சிவந்தது. பின்பு தன்தோழர்களைநோக்கி பாரசீகர்களையும், ரோமர்களையுமா நீங்கள் பின்பற்றுகிறீர்கள் ? இறை வேதமும் இறைத் தூதரின் வாக்கும் நமக்கு போதாதா? என்றார்கள் .
இந் நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாமியர்கள் எச்சூழ்நிலையிலும் வரம்பு மீறுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது புலப்படுகிறது.

எனவே மதப்பற்று இருக்கலாம் மதவெறி இருக்கக்கூடாது. இனப்பற்று இருக்கலாம் இனவெறி இருக்கக்கூடாது என்பதே ஆழ்ந்த ஆழமான கருத்து. இதையே பின் வரும் நபிமொழியில் தெளிவுபடுத்தப்படுகிறது. ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி (ஸல் ) அவர்களிடம் வந்து இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி என்றார்கள்.- நூல் அஹ்மத்:

ஆகவே மத வெறிக்கோ இனவெறிக்கோ இஸ்லாத்தில் இடமில்லைஎன்பதைமாநபிஅவர்கள்வலியுறுத்தியுள்ளார்கள். நீங்கள் பூமியில் உள்ளவர்களை நேசியுங்கள், இரக்கம் காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்களை நேசிப்பான், இரக்கம் காட்டுவான் என்ற கருத்தை வெளிப்படுத்தி முழு மனித சமூதாயமும் ஒரே சமுதாயமே என்பதை வலியுறுத்தினார்கள்.
அவ்வாறேபிறமதத்தைச்சார்ந்ததலைவர்களையும்,அவர்களின் கருத்துக்களையும் மதிக்கும் அருமை நபியின் பண்புகளை மக்கா வெற்றியின் போது காண முடிந்தது.

அதாவது மக்காவின் மண்ணின் மைந்தர்களாகிய முஹாஜிரீன்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் புகுந்தார்கள் என்ற காரணத்தினால் சொந்த தாய்நாடு மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தன் அன்பான குடும்பம், சொந்த பந்தங்களை துறந்து அகதிகளாக மதினாவில் தஞ்சம் புகுந்தார்கள். ஆனால் எட்டு ஆண்டுகளிலேயே மிகப்பெரும் படைபலம், ஆல்பலத்துடன் மக்காவிற்குள் நுழைந்த முஹாஜிரீன்கள்தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மனதிலே நினைத்து இன்று பழிவாங்கும் நாள் என்று தங்களுக்கு மத்தியில் கூறிக்கொண்டார்கள். இதை செவிமடுத்த அபூசுப்யான் பீதி அடைந்தவராக மாநபியிடம் ஓடி வந்து பாதுகாப்பு கேட்கிறார். அது நாள் வரை தனக்கும், தன் தோழர்களுக்கும் இழைத்த கொடுமைகளை மன்னித்து நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் இப்படி அறிவிக்கிறார்கள்.இன்றைய நாள் மன்னித்து இரக்கத்தோடு நடந்து கொள்ளும் நாள் என்று: இன்னும் அபூசுப்யான் வீட்டில் அபயம் தேடி நுழைந்தவர் பாதுகாப்பு பெற்றவர் என்றும் அறிவித்தார்கள்.

இன்றளவும் இஸ்லாமிய கோட்பாட்டில் வாழும் முஸ்லீம்கள் மாற்று மததுக்கோ, அதை சார்ந்தவர்களுக்கோ எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் சில விஷமிகள், மனித குலத்தின் மகா எதிரிகள் மத நல்லிணக்கத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி அச்செயலுடன் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் இணைத்து உலக அமைதியின்மைக்கு முஸ்லீம்களே காரணம் என்ற நச்சுக் கருத்துக்களை பரப்புகின்றனர். ஆனால் முஸ்லீம்கள் இறை வேதம், இறைத்தூதரின் வாக்கின் அடிப்படையில் அழகிய பண்புகளை வெளிப்படுத்தி இவர்களின் சொற்போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் இன்ஷாஅல்லாஹ்.:

எல்லாம் அறிந்த இறைவனுக்கே எல்லாப்புகழும் .:
வபில்லாஹித்தவ்பீக் வல்ஹிதாயா.:
வஸ்ஸலாம் .:

Source :
http://sppattinampukal.blogspot.com/



· 
· 
தக்கலை கவுஸ் முஹம்மத் அல்குர்ஆன் 28வது அத்தியாயம் 8வது வசனத்தில் முஸ்லீம்களே உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

நீங்கள்வணங்ககூடியவைகளைநாங்கள்வணங்கமாட்டோம்.நாங்கள்வணங்கிடும்இறைனைநீங்களும்வணங்கப்போவதில்லை(எனவே நமக்குள் எவ்வித சண்டை சச்சரவுகளும் தேவையில்லை) உங்கள் மதம் உங்களுக்கு. எங்கள் மார்க்கம் எங்களுக்குஎன்று கூறுவதின் மூலம் சிறந்த மத நல்லிணக்கத்தை அல்குர்ஆன் கற்றுத் தருகிறது.





Abdul Kapur Mohamed Noohu மாற்று மதத்தினரோடு விரோதம் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும் , தன் சக இஸ்லாமியனோடு இன்று விரோதம் பாராட்டுபவர்கள் எத்தனை பேர் ! அண்ணன் தம்பியோடும் , மகன் தந்தையோடும் விரோதம் காட்டும் மனப்பாங்கு இங்கு அதிகரித்திருப்பதின் காரணம் என்ன என்று கண்டோமா ? நமக்குள் நாமே பிரிவினையை ஏற்படுத்தி, ஒன்றுபட்டிருந்த சமுதாயத்தை பல பிரிவுகளாக்கி அதன் காரணமாக இந்த இஸ்லாமிய சமுதாயத்தை ஒரு மாபெரும் இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு வந்திருக்கிறோம் .இதை யாரும் மறுக்க முடியுமா ? கொள்கையென்ற பேரில் பிரிந்து கிடக்கும் இந்த சமுதாயத்தை யார் ஒன்றிணைக்க முடியும் ? தேர்தல் நேரத்தில் மட்டும் ஒற்றுமையை பற்றி பேசும் நாம் மற்ற நேரங்களில் ஏன் அதை வலியுறுத்துவதில்லை! எல்லோருக்கும் தன் இயக்கம் வலுப்பெறவேண்டும் என்ற குறிகிய எண்ணம் !
100, 150 பேர் இருக்கும் சின்ன கிராமங்களில் கூட இஸ்லாமியர்கள் நான்கைந்து இயக்கங்களாக பிரிந்து கிடக்கிறார்கள். இதனால் பாதிப்படைவது இஸ்லாமியர்கள் என்ற உண்மையை உணருவதற்கு நமக்கு மனம் இல்லை !!!



தீன் தொடர்பான விசயத்தில்
எவர்கள் உங்களுடன் போர்
புரியவில்லையோ. -உங்களை உங்களுடைய
வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ.-
அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும். நீதியுடனும் நடக்க
அல்லாஹ் தடுக்கவில்லை. நீதி செலுத்துவோரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.60:8
உங்களுக்கும்..இன்று யாருடன் பகைமை கொண்டிருக்கின்றர்களோ
அவர்களுக்குமிடையே
அல்லாஹ் என்றைக்கேனும் அன்னை ஏற்படுத்தக்கூடும்.
அல்லாஹ்
பேராற்றலுடையவன்.60:7



1 Comments:

At 5 March 2020 at 21:59 , Blogger Unknown said...

28வது அத்தியாயம் 8வது வசனம் என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ள வசனம் 60வது அத்தியாயம் 8வது வசனம்... திருத்திக்கொள்ளவும்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home