24 September 2014

மிக சிறந்த குர்பானி எது தெரியுமா ..?









எல்லா பங்கு தாரரும்...கண்மணி நாயகத்திற்காக நிய்யத் செய்து கொள்வது !
கூட்டுகுர்பானி யில் ,,,வட்டி போன்ற ஹராமான தொழில் செய்பவர்கள் கூட்டு சேர்ந்தால்.....யாருடைய குர்பானியும் ..சேராது ..!எச்சரிக்கை !
வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு ஆடு என கொடுக்கவும் கூடாது !
ஒரு ஆடு ஒரு நபருக்குத்தான் !
கூட்டு குர்பானியில் முஸ்லிம் அல்லாதவர் இணைந்தால் ..யாருடைய குர்பானியும் ..கூடாது !
குர்பானி கொடுக்க கடமை பட்டவர் ...தனக்கு கொடுக்காமல்....மறைந்த பெற்றோருக்கும் கொடுக்கலாம் !
இருந்தாலும்...தனக்கும் கொடுக்க வசதி இருந்தால் ..கண்டிப்பாக கொடுக்கணும் !
கண்டிப்பாய் ..பெருநாள் தொழுகைக்கு முன் கொடுக்க கூடாது !
வசதி படைத்த ஒருவர் ..ஏழையான தன் நண்பருக்கும்,,,அவரது அனுமதி பெற்று ,,குர்பானி கொடுக்கலாம் !
தொழுகையை அலட்சியமாக கருதுபவர் ...குர்பானி கொடுத்தால்...அது குர்பானியாக ஆகாது !
குர்பானி கொடுப்பவர் மட்டும் பிறை ஒன்றில் இருந்து பத்துவரை ..அதாவது குர்பானி கொடுக்கும் வரை முடி ,,நகம் களைய கூடாது !
ஏற்கனவே வாங்கப்பட்ட பிராணியை விட சிறந்ததாக வாங்கணும்..என்றால் மட்டும் மாற்றி வாங்கி கொள்ளலாம் !




தகுதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர்...அல்லாஹ்வின் அருளுக்கு ..அருகதையற்றவர் ..என கண்மணி நாயகம் சொல்லி இருக்கிறார்கள் !
தகுதியிருந்தும் ,,குர்பானி கொடுக்காதவர்கள் ..ஈதுப்பெருநாள் தொழுகையை கூட வர வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள் கண்மணி ரஸூலுல்லாஹ்!
பெண்களும் குர்பானி அறுக்கலாம் !
இரவில் அறுப்பது ..மக்ரூஹ் !
அருப்பவருக்கு தோலை..கூலியாக கொடுக்க கூடாது !
ஓர் ஆண்டு பூர்த்தியான ஆடு..இரண்டு ஆண்டு பூர்த்தியான மாடு ,,ஐந்து வருடம் பூர்த்தியான ஒட்டகம் ..தான் கொடுக்கணும் !
குர்பானி அறுக்க தெரியாதவர் ..அறுப்பவரின் கைமேல் ,,தன் கையை ,வைத்துக்கொண்டு...பிஸ்மி சொல்ல வேண்டும் !
அப்படி செய்யாவிட்டால்..குர்பானி கூடாது !
தமக்கு பதிலாக பிறரை ,,குர்பானி தரும்படி ,,கூறலாம் !
கடனாளியான ஒருவர் ...குர்பானி கொடுப்பது கடமை இல்லை !


மிக சிறந்த கூட்டுகுர்பானி ...
நன்றி:Shafiyath Qadiriyah

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home