21 February 2016

முஸ்லிம்கள் என்றாலே ......

முஸ்லிம்கள் என்றால் இரவு 10 மணிக்கு மேல் சாலையில் செல்லமுடியாது
-இயக்குனர் வெற்றிமாறன்

முஸ்லிம்கள் என்றால் இரவு 10 மணிக்கு மேல் சாலையில் செல்லமுடியாது
எனக்கு அதிக இஸ்லாமிய நண்பர்கள் உண்டு அவர்கள் வேதனையுடன் சொல்வார்கள் அது ஒரு உறுத்தலாக இருந்தது அதனால் அந்த வேதனையை மக்களுக்கு காட்டவேண்டும் என்பதால் எனது படத்தில் அதை காட்சிபடுத்தினேன்.
இரவு ஒரு மணிக்கு சாலையில் நடந்து வரும் அப்சல் என்ற இளைஞர்
விசாரணை பட வசனம்
"உன் பேரு என்ன.?.
அப்ஸல்
அல்கொய்தாவா இல்லன ஐஎஸ்ஐஎஸ்யா....
நான் தமிழுங்க....
அப்போ LTTEயா....."
இப்படித்தான் இன்று இஸ்லாமியர்களை பார்க்கிறார்கள் என்று வேதனையுடன் இன்று கவிக்கோ மன்றத்தில் நடந்த விசாரணை கலந்துடையாடல் நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன் பேசினார்.
வாழ்த்துக்கள்
இந்த நிகழ்ச்சியில் சகோ: தடா ரஹீம் அவர்களும் கலந்துக்கொண்டு தனது சிறை அனுபவங்களை பதிவு செய்தார்.
நன்றி:Editör Alaudeen
அஷ்ரப்

கற்ப்பு என்பது இஸ்லாத்தில் இருபாலருக்கும் சமம்.

அவன் ஆம்பளே எப்படி வேண்டுமானலும் திரிவான் நீ பொம்பள நீதான் ஒழுக்கமாக இருக்கலாம் என ஒருதலைப் பட்சமாக இயங்குகிறது இன்றைய சமூகம்.
இன்னும் ஓர் கோண்ம்....
பெண் பிள்ளைகளை வளர்ப்பதை விட ஆண் பிள்ளைகளை வளர்ப்பது கஷ்டமாகி விட்ட காலகட்டம் இன்று
இஸ்லாம் இதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கற்பை பொதுவில் வைக்கிறது.
அல்குர்ஆன் ஆண்களே உங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் கற்பை காத்துக் கொள்ளுங்கள் என்கிறது.
பார்க்க இறைவசனம்:
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர் ஆன் 24:30.)
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ
அஷ்ரப்

இது 18+ தான்! அவசியம் படிக்கவேண்டியதும் கூட!!

மலத்துவாரத்தின் வழி உடலுறவு கொள்வதை இஸ்லாம் வண்மையாக கண்டித்து தடை செய்கிறது.
யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அபூதாவூத் 1847, அஹ்மத் 3356
யார் ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ மலத் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : திர்மிதீ 1086
ஈமானிய பலஹீனமுள்ள இன்றைய தலைமுறையினர் பலியாடுகளை போல, மிருகங்களை போல உடலுறவு கொள்ளும் நீல ஏ படங்களை பார்த்து அதுபோல சொந்த வாழ்விலும் நடைமுறைப் படுத்திப் பார்க்கும் அசிங்கமான முயற்சியில் இறங்குகிறார்கள் இறையச்சமற்று.ஆபாசப் படம் பார்ப்பது கண்கள் செய்யும் விபச்சாரம் என்கிற சிந்தனை மரத்து விட்டதின் பின்விளைவு இது
பலர் உணருவது போல அந்தப் படங்களில் இருவர் “உண்மையில்’ உறவு கொள்வதில்லை; நடிக்கவே செய்கிறார்கள். அதன் பின்னே பலரது சோடனைத் திறமையும், தொழில்நுட்பமும் சேர்ந்திருக்கிறது.
யதார்த்தமான ஒரு உடலுறவில் இவையெல்லாம் சாத்தியமேயில்லை! டபிள்யூ. டபிள்யூ. எஃப் (WWE) மாமிச மலைகளின் மல்யுத்தக் காட்சிகள் தொடங்குமுன், “”இது எங்கள் தொழில்முறை வீரர்களின் அதி உயர் பயிற்சியினால் நடத்தப்படும் சண்டைக் காட்சிகள். இதைப் பார்த்துச் சண்டை போடுவது உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்’’ என்று எச்சரிக்கை வெளியிடுகிறார்கள்; படுக்கைக் காட்சிகளுக்கு அப்படிப் போடுவதில்லை – அவ்வளவுதான்.
வாழ்க்கை துணையினர் இருவர் உடலுறவு கொள்ளும் போது இருவருக்கும் திருப்தி ஏற்பட்டு சுகம் ஏற்பட வேண்டும் ஒருவருக்கு சுகம் மற்றவருக்கு வேதனை ஏற்படுத்தக் கூடாது மலப் பாதையில் உடலுறவு கொள்வது ஒருவருக்கு வேதனை ஏற்படுத்தும் இயற்கைக்கு முரணான அசிங்கமான செயல்.
நன்றி:வலையுகம் ஹைதர் அலி
-
அஷ்ரப்

சுன்னத் என்ற மார்க்ககல்யாணம்




எயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக்
கொள்கையே! மீண்டும்
நிரூபித்தது பி.பி.ஸி உலக சேவை!
பகிர்ந்து கொள்க
இயற்கை மார்க்கம் தான் உலகின்
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தர முடியும்.
இஸ்லாம் என்பது இறைவனால்
அருளப்பெற்ற இயற்கை மார்க்கமாகும். இந்த
இயற்கை மார்க்கம் மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
மிகத் தெளிவான
பதில்களைத்தருகிறது என்றால் அது மிகையில்லை.உலகையை ஆட்
டம் காணச்செய்யும் மிகக்
கொடிய நோயான
ஹெச்.ஐ.வி. எய்ட்ஸை விட்டும் மனிதனைக்
காப்பாற்ற பல நாடுகளும் தங்களால் முடிந்த
மருத்துவக்கண்டுபிடிப்புக்களில் இறங்கியுள்ளன. இவ்வகையி
ல் ஆய்வுகளை மேற்கொண்ட பல நாடுகளும்
இந்தக் கொடுமையான நோய்க்கு தீர்வாக முன்
வைத்துள்ளது விருத்த சேதனம் என்ற
இஸ்லாமிய வழிகாட்டளைத் தான். ஆம்
ஆண்கள் தங்கள் மர்ம உருப்பின்
முன் பகுதியை நீக்கி விருத்த சேதனம்
செய்து கொள்வதின்
மூலம் இந்த நோயின் பாதிப்பை 60
சதவீதத்தினால் குறைக்க முடியும்
என்று தெரிவித்துள்ளது. இஸ்லாம் கூறும்
தீர்வுதான் இறுதித் தீர்வாகும்.
“இயற்கை மரபுகள் ஐந்தாகும்.விருத்த
சேதனம் செய்து கொள்வது,மர்ம
உறுப்பின்
முடிகளைக்களைந்து கொள்வதற்காக சவரக் கத்தி
யை உபயோகிப்பது ,மீசையைக்
கத்தரிப்பது ,நகங்களை வெட்டுவது,அக்குள்
முடிகளை அகற்றுவது ஆகியவை தாம்
அவை ”என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி5891
மேற்கண்ட செய்தியில் இயற்கையாக
செய்ய வேண்டிய கடமைகளின் பட்டியலில் முதல்
இடத்தில் விருத்த சேதனத்தைத் தான் இஸ்லாம்
குறிப்பிடுகிறது.
ஆண்கள் விருத்த
சேதனம் செய்து கொள்வதென்பது எ
யிட்ஸ் என்ற கொடிய
நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்க
பெரிதும் உதவுகின்றது என்பதை
இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.
பி.பி.ஸி உலக சேவை 18.08.2011 வெளியிட்டுள்ள
தகவல். உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்
கும் அதிகமானோர் எச் ஐ
வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இவர்களில்
மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்
கு தெற்கே உள்ள
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த எச்

வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை வி
ஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை,
அதனை தொற்றாமல் தடுப்பதற்கான
வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள்
நடத்தப்படுகின்றன. இந்த நோய்
பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள்
விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம்
60வீதத்தால் குறைக்க முடியும்
என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
அதாவது முஸ்லிம்கள் உட்பட சில
சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்
குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்தசேஷனம்
ஆகும். இதனால்,பல ஆப்பிரிக்க நாடுகளில்
ஆண்கள்
விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்கு
விப்பதற்கான திட்டங்கள்
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜிம்பாப்பேவேயிலும் அ
ரசாங்கம்
இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொட
ங்கியுள்ளது.2025ஆம் ஆண்டுக்குள்
பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண
முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம்
நம்புகிறது.https://web.facebook.com/suppersana?hc_location=timeline
ஹெச்.ஐ.வி.
எய்ட்ஸ் பற்றி பி.பி.சி ஏற்கனவே வெளியிட்ட
ஒரு தகவல். இஸ்லாம்
சொல்லும் கத்னா முறை – ஆண்கள்
தங்கள் மர்ம உருப்பின் முன் பகுதியை நீக்குவதின் மூலம்
விருத்த சேதனம் செய்துகொள்வதின்மூலம்
ஏற்படும் நன்மைகளை பி.பி.சி உலக சேவை ஏற்கனவே பல முறை சு
ட்டிக் காட்டியிருந்தது.
அதன் ஒரு பகுதியை இந்த ஆக்கத்துடனும்
இணைத்துத்தருகிறோம். ஹெச்.ஐ.வி.
எய்ட்ஸ் தொடர்பாக
உலகளவிலான மிகப்
பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின்
சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான
பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன
. ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த
சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல்
தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் எ
ன்பதைக்
கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்ப
டவுள்ளது. இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட
குழுக்கள் பெற்றுக்
கொள்கின்றன.என்று பி.பி.சி.யின் செய்தி த
ெரிவிக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் வாழும்
முஸ்லிம்களில் எய்ட்ஸால் திக்கப்பட்டோர்
மிகக் குறைவு தான். ஆனால்
முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான
அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம்
நீண்ட நாட்களாக அறியப்பட்ட
உண்மையாகும். தென் ஆப்பிரிக்க ஆண்களில்
60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும்
அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்க
னவே கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பை அ
ண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும்
சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது. இவ்வாறு
கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறி
ய முடிகின்றது என்று தனது செய்தியில்
பி.பி.சி. தெரிவிக்கிறது. இந்தக்
காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா?
அல்லது அவர்கள் குறைந்த
அளவிலான பெண்களிடம் உடலுறவு க
ொள்வது தான் காரணமா? என்று த
ெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகி
ன்றது.
அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத்
தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக்
காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது. கத்ன
ா, விபச்சாரத் தடை,பலதார மணம்
இம்மூன்றில் எதுவாக
இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால்
ஏற்பட்ட கண்ணியம்
தான். ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதி
யளவுக்கு கத்னா பாதுகாக்கிறது என்று அ
மெரிக்காவின்
சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயா
ர்க் டைம்ஸின்
செய்தியாளர் டொனால்டு ஜி.
மெக்நெய்ல் குறிப்பிடுகிறார். சுரப்பிகளிலிருந்து
சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித்
தோல் பகுதியில் தேங்குகின்றன.
ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட
பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கன
வே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள்
எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்ற
து. அதனால் உடலுறவு கொண்ட அந்த
ஆணும்
ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்
காகி விடுகின்றான் என்று அந்தச்
செய்திக் குறிப்பில் அவர்
மேலும் தெரிவிக்கின்றார். இறுதியாக……………… இ
ஸ்லாமிய மார்க்கம் தான் இவ்வுலகின்
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல
முடியும் என்பதை மேற்கண்ட செய்திகள் மீண்டும்
மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
ஆக இஸ்லாம்
கூறும் சட்டதிட்டங்களை ஏற்று நடந்து இம்மையிலும் மறுமையிலு
ம் வெற்றி பெருவோமாக..


அஷ்ரப்