26 December 2014

30 வயதில் கட்டாயம் செய்ய வேண்டிய சில முக்கியமான மருத்துவ பரிசோதனைகள்!


நீங்கள் 30 வயதை நெருங்கி கொண்டிருப்பவரா? அப்படியானால் 30 வயதை தொடும் முன் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு பெரிய பட்டியலே உள்ளது. இவைகளுக்கெல்லாம் நேரமே இல்லாமல் இருந்திருக்கும்… விடுமுறை எடுப்பது, நடனம் கற்பது, வானத்தில் பறப்பது… கடைசியாக மருத்துவ பரிசோதனையும் கூட!
ஆனால் மருத்துவ சோதனை என்று வரும் போது, எந்த சோதனைகளை எல்லாம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாது. கவலை வேண்டாம் – 30 வயதில் எடுக்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் பற்றி மருத்துவர்கள் த்வனிகா கபாடியா மற்றும் பிரகாஷ் லுல்லு நமக்கு விவரமாக கூறியுள்ளார்கள்.

சுவாரஸ்யமான வேறு: கூச்சப்படாம வீட்டுக்குள்ள ‘சும்மா’ சுத்துங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லதாம்!

அடிப்படை இரத்த சோதனை
அனைவரும் தங்களின் உடலில் உள்ள இரத்தத்தின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் அளவு மற்றும் இரத்தவெண் செல்லெண்ணிக்கை போன்றவைகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். வைட்டமின் பி12 அல்லது டி3 போன்ற ஊட்டச்சத்து குறைபாடு ஏதேனும் இருந்தாலும் கூட, அதனை இரத்த சோதனை வெளிப்படுத்தும்.

இரத்த சர்க்கரை சோதனை
சர்க்கரை நோயை கண்டறிவதற்கு இரத்த சர்க்கரை சோதனை தேவைப்படும். அதிலும் ஹீமோகுளோபின் க்ளைகேஷனை (இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குளுகோஸின் அடர்த்தியை தெரியப்படுத்தும்) சோதனை செய்யலாம். சர்க்கரை நோய் மற்றும் இதயகுழலிய நோய்களுடன் சம்பந்தப்பட்டது ஹீமோகுளோபின் க்ளைகேஷன்.

சிறுநீர் பரிசோதனை
உடலில் ஏதேனும் தொற்றுக்களை கண்டறிய சிறுநீர் பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.

யூரிக் அமில பரிசோதனை
மூட்டு வலி இருக்கும் போது இது முக்கியமாக தேவைப்படும். யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் போது, இளவயது ஆண்களுக்கு கீல்வாதம் ஏற்படும்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக சோதனை
இவைகள் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு இந்த சோதனையாகும். உங்கள் உடலின் ஹார்மோன் அளவுகளும், என்சைம் செயல்பாடுகளும் சரியாக உள்ளதா என்பதையும் தெளிவுப்படுத்தும்.

க்ரியேடினைன் அளவுகளை சோதித்தல்
உங்கள் சிறுநீரகம் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள இந்த சோதனை தேவைப்படுகிறது. அதற்கு க்ரியேடினைன் சோதனையை மேற்கொள்ள வேண்டும். இதுவும் ஒருவகையான இரத்த பரிசோதனை தான்.

கொழுப்பு சோதனை/ஈசிஜி
“நீங்கள் உடல்ரீதியாக அதிக வேலை பார்ப்பதில்லை என்றால், கொழுப்பு சோதனையை மேற்கொள்ளுங்கள்” என்று டாக்டர் கபாடியா கூறுகிறார். ட்ரைகிளைசெரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், வருங்காலத்தில் ஏற்படும் இதய சம்பந்த பிரச்சனைகளில் இருந்து தப்பலாம். அளவுக்கு அதிகமான சோர்வு, வியர்த்து கொட்டுதல், பதற்றம் மற்றும் நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் தான் ஈசிஜி (எக்கோ கார்டியிக்ராம்) சோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார். எனவே வருங்காலத்தை மனதில் வைத்து செய்யப்படுவது இந்த சோதனை.

பொதுவான உடல் பரிசோதனை
இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை போன்ற பிற முக்கியமானவைகளையும் சோதித்து கொள்ள வேண்டும்.

தைராய்டு சோதனை
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை தான் தைராய்டு. தைராய்டு பிரச்சனை அல்லது தைராய்டு நோய் என்பது போதுமான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பிகள் சுரக்கவில்லை என்றால் உண்டாகும். இதனால் அளவுக்கு அதிகமான உடல் பருமன் அல்லது மெலிதல் உண்டாகும். அதனால் கீழ்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் அதற்கான சோதனையை மேற்கொள்ளுங்கள். அவையாவன மிகுதியான சோர்வு, உடல் பருமன், உடல் எடை குறைதல்.

சோனோகிராஃபி
சோனோகிராஃபி செய்து கொண்டால் உங்கள் கல்லீரல், சிறுநீரகம், சினைப்பை மற்றும் கர்ப்பப்பை சீராக செயல்படுகிறது என்பதை தெரியப்படுத்தும். உங்கள் உடலில் உள்ள அனைத்து என்சைம்களும் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதையும் தெரியப்படுத்தும். பாலிசிஸ்டிக் ஒவேரி சிண்ட்ரோம் (PCOD) அல்லது கர்ப்பப்பை கட்டி உண்டாவதையும் வெளிக்காட்டும்.

-
அஷ்ரப்

எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !

இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை.

எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!

மிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும்  சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம்.  தமிழ்ச் சமுதாயத்தை  சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக,  சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம்.
எம்.ஜி.ஆர் பாசிஸ்ட்
கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் படம்.
இன்று ஜெயலலிதாவை விமரிசிக்கின்ற எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உட்பட பலரும் எம்.ஜி.ஆரை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், ஊழலற்ற உத்தமராகவும், மக்களுக்காகப் பாடுபட்டு உயிர்துறந்த மாமனிதராகவும்  காட்டுவதுடன், அவர் காட்டிய வழியில் செல்லத் தவறியதுதான் ஜெயலலிதாவின் குற்றம் என்பதாகவும் சித்தரிக்கின்றனர்.
எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். அவர் 1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்”  என்ற புதிய திரைப்படம் சென்னையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’,  ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று பத்தாண்டுகளாக கருணாநிதி கட்சியின் பத்திரிகைகள் எழுதி வந்தன. இதற்குப் பொருத்தமாக கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் சினிமா படம் ஒன்றையும் தவறாது வெளியிட்டு வந்தன.
எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, பச்சோந்தித்தனமாக நிறத்தை மாற்றிக் கொண்டு நாற்பதாண்டு இனிய நண்பரை இழந்த துக்கத்தில் மூழ்கிவிட்டார், கருணாநிதி.  கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும், இத்தகைய கேடுகெட்ட ‘ராஜதந்திரங்களை’ நியாயப்படுத்திக் கொள்வதற்காக, இவற்றையெல்லாம் உயர்ந்த அரசியல் பண்பாடு என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.
எம்.ஜி.ஆர் கவர்ச்சி அரசியல்
இறந்தும் உயிர்வாழ்பவர் : எம்.ஜி.ஆர் உருவாக்கிய கவர்ச்சிவாத பொறுக்கி அரசியல்தான் இன்றும் தமிழகத்தில் கோலோச்சுகிறது.
திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தியே அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம் முதல் தா.பாண்டியன் வரையிலான போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து இந்த எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழின அடையாளங்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் சவக்குழி தோண்டியவர் எம்.ஜி.ஆர். இன்றைய ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதைப்போலத்தான், எம்.ஜி.ஆரின் வள்ளல்தன அறிவிப்புகள் பலவும் இருந்தன. விவசாயியாகவும், தொழிலாளியாகவும், மீனவ நண்பனாகவும் நடித்து விட்டு, அதே மக்களை தேவாரம்-மோகன்தாசு தலைமையிலான போலீசு மிருகங்களை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர். அவரை மனிதநேயர், வள்ளல் என்பது நிகழ்கால வரலாற்றையே திரித்துப் புரட்டுவதாகும். இந்த உண்மையை மறைத்து, தெரிந்தே பார்ப்பன ஊடகங்களும் பிழைப்புவாத ஊடகங்களும் சினிமாக்காரர்களும் புளுகித் திரிகின்றனர்.
சந்தேகப்பிராணியான ஜெயலலிதா தனது உடன் பிறவாத சகோதரி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உட்பட விசுவாசிகள் மீதும் அமைச்சர்கள் மீதும் உளவுப்படை போலீசை விட்டு வேவு பார்ப்பதும், சொந்த புத்தி இல்லாமல் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் கோள் மூட்டும் போதெல்லாம் பதவிகளைப் பறித்து அவர்களைப் பந்தாடுவதும், கஞ்சா வழக்குகள் பேடுவதும் எம்.எல்.ஏ., எம்பி.க்களைக்கூட தோட்டத்துக்கு இழுத்து வந்து அடிப்பதும் கூட எம்.ஜி ஆரிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம்தான். காரியத்தைச் சாதித்துக்கொள்ள அரசியல் பிரமுகர்களுக்குப் பலவகை விருந்து வைப்பதுகூட எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் கலைதான். ஏன், ஜெயலலிதாவையே உளவு பார்த்து, மிரட்டி, ஒதுக்கி வைத்தார், அவரை விஞ்சிய சந்தேகப் பிராணியான, எம்.ஜி.ஆர்.
இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக்கட்சிக்கும், அதன் லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை. இந்த உண்மை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது.  இதனை அனுபவித்த முந்தைய தலைமுறையினரோ மறந்து விடுகின்றனர். இதுதான் அன்றாடப் பரபரப்புச் செய்திகளில் மூழ்கடிக்கப்படும் நமது மக்களின் மிகப்பெரிய பலவீனம். இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான், அரசியல் அறிவும் ஜனநாயக உணர்வுமற்ற ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியைப் பராமரித்து வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா ஆட்சியைப் புரிந்து கொள்வதற்கு, அவருடைய ‘அரசியல் உடன்கட்டை’ எம்.ஜி.ஆரின் ஆட்சியைப் புரிந்து கொள்வது அவசியம். 1987-ல் எம்.ஜி.ஆர். இறந்ததை ஒட்டி, “புதிய ஜனநாயகம்” ஏட்டில் வெளியிடப்பட்ட “ஒரு பாசிஸ்டின் மரணம்” என்ற சிறப்புக் கட்டுரையை இங்கே சுருக்கித் தருகிறோம்.

புர்ரட்சித் தலைவர்!

வெங்கட்ராமன் - எம்.ஜி.ஆர்
ஆர்.வி – எம்.ஜி.ஆர் அணைப்பு : திராவிட இயக்க அரசியலை ஒழிக்க பார்ப்பனப் பிணைப்பு!
காங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., தி.மு.கழகக்காரராகப் பிரபலமானார். ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக் கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார்.  அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார் ‘புர்ரட்சித் தலைவர்’!
அண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தைப் பத்து ஆண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். எம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப் படுகொலைகளை, குரூர இன்பங்காணும் நடவடிக்கைகளை, கொடூரமான கோமாளித்தனங்களை மறைத்துவிட முடியாது. அவற்றை எம்.ஜி.ஆர். உடலோடு சேர்த்து மெரினா கடற்கரையில் புதைத்துவிட முடியாது. மெரினா – அங்குதானே எம்.ஜி.ஆரின் போலீசு வெறிநாய்கள் தேவாரத்தின் தலைமையில் மீனவர்களைக் கடித்துக் குதறின; அங்குதானே மீனவர் குப்பங்களைச் சூறையாடின. அவை நினைவுக்கு வருகின்றன. அவை தமிழகத்தின் இருள் நிறைந்த பத்தாண்டு வரலாறு ஏற்படுத்திய வடுக்கள்!
கருணாநிதி ஆட்சியின் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளைச் சொல்லி தூய்மையான “அண்ணா”வின் ஆட்சிக் காணப் போவதாகச் சொன்னார், எம்.ஜி.ஆர். ஆனால், அவரது ஆட்சியில் தழைத்தோங்கிய இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடு, மோசடி, தில்லுமுல்லு, எத்து வேலை, பித்தலாட்டம் அனைத்திற்கும் மூலகர்த்தாவாக எம்.ஜி.ஆரே விளங்கினார். தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர் பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்தார்.
இடி அமீனையும் விஞ்சிவிடும் ஆடம்பர, வக்கிர வாழ்வும், விருந்தும், அரசு விழாக்களும் நடத்தினார். சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது “சின்ன வீடு” சினிமாப் பார்த்து மகிழ்ந்தார். 12 கோடிக்கு ஆடம்பரமாக உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். கருணாநிதி நடத்தினார் என்பதற்காகவே அடுத்த உலகத் தமிழ்  மாநாட்டைப் புறக்கணித்து, பங்கேற்பவர்களையும் தடுத்தார்.

ஒரு வள்ளலும் ஓராயிரம் ஒட்டுண்ணிகளும்!

பாசிசக் கோமாளி
பாசிசக் கோமாளியின் அடுத்த வாரிசு
“மாண்புமிகு புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி, டாக்டர் எம்.ஜி.ஆர்.” என்று தற்புகழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார். அரசு கட்டிடங்களின் எல்லா கல்வெட்டுகளிலும் தன் பெயரே இருக்க வேண்டும் என்று வெறியோடு உத்திரவிட்டார். முகத்துதிபாடும் கூட்டத்துக்கு பொன்னும் பொருளும் கொடுத்து வள்ளலென்றும், நோபெல் பரிசுக்குரிய மேதை என்றும் புகழ வைத்தார்.
இதயம் பேசுகிறது மணியன், மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., சண்முகவேல், சோலை, வலம்புரிஜான் ஆகிய அவரது முகத்துதிபாடும் பத்திரிக்கை எடுபிடிகள்; போலி கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், ரங்கச்சாரி, வி.பி.ராமன் ஆகிய அரசியல் ஆலோசகர்கள்; மோகன்தாஸ் தலைமையில் ஒரு உளவுப்படை, தேவாரம் தலைமையில் ஒரு அதிரடிப்படை – இடி அமீனைச் சுற்றி ஒரு அல்லக்கைக் கூட்டம் அமைந்ததைப் போல இவர்கள் எம்.ஜி.ஆரைச் சுற்றியிருந்தனர்.
தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை எம்.ஜி.ஆர். தானமாகக் கொடுத்தார். சென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும், சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும், போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும், மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும் எழுதிக் கொடுத்தார்.
முனு ஆதி, லியாகத் அலிகான், மா.பொ.சி., அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டியன், கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம், பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தார்.

பாசிசக் கோமாளி!

தனது அரசியல் எதிரிகளை ஒழிக்கும்பொருட்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, சட்டமன்ற பதவி பறிப்பு, வெடி குண்டு வழக்கு, இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது தாக்குதல், தனது அமைச்சர் மீதே கொலை வழக்கு என்று பல வக்கிரமான வழிகளை மேற்கொண்டார்.
04-mgr-1மோகன்தாஸ் – தேவாரம் படையை ஏவிப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்தார். பத்திரிக்கைகள் மீது குண்டர்களை ஏவித் தாக்கினார்; சபாநாயகர் பாண்டியனை ஏவி அரசியல் எதிரிகளை சிறையிலிட்டார்; நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார். சிறை – சித்திரவதை – படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தார். தனது அரசுக்கு விரோதமாகத் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகளையும் தனது அரசை விமர்சிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் உளவு பார்க்கச் செய்தார். நாடு கடத்தும் சட்டம் என்றொரு வக்கிரமான சட்டத்தைக் கொண்டு வந்தார்.
பெரியாரின் வாரிசு, பகுத்தறிவு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டே குறி கேட்டுத்தான் எந்தச் செயலையும் செய்தார். கோஷ்டி பூசலால் ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி வந்த போதெல்லாம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது மனைவிமார்களில் சிலரையே அந்நிய உளவாளிகள் என்று அறிவித்துக்கொன்றான் இடி அமின். எம்.ஜி.ஆரோ ஒரு பாசிசக் கோமாளிக்கே உரிய முறையில் பத்திரிக்கைகளில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் கொடுத்தார்.
“அரசு நிர்வாகத்தில் சம்பந்தமில்லாத யாருடைய தலையீட்டையும், குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாக இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். அமைச்சர்களே ஆனாலும் சரி, தலைமைச் செயலாளர் அல்லது உயர் அதிகாரிகள் சம்பந்தபட்ட ஏனைய யாராக இருந்தாலும் சரி என்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.”
எம்.ஜி.ஆர். ஆட்சியின் ஒவ்வொரு அசைவிலும் அதன் அருவருக்கத்தக்க இழிவான அம்சம் முழுவதுமாக வெளிப்பட்டு அம்பலமான பின்னும், நோயுற்று நடைபிணமான பின்னும், அவர்  மத்திய அரசுக்குத் தேவையான எடுபிடி என்பதால் ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியின் பாசிச, சேடிச, கோமாளித்தனங்களை அவருடைய “தோழமை”க் கட்சிகள், பத்திரிக்கைகளே நியாயப்படுத்த முடியாமற் தவித்த சம்பவங்கள் ஏராளமாக உண்டு. மறைமுகமாக அவரை ஆதரித்த துக்ளக், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி, இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகளும், போலி கம்யூனிஸ்டுகளும் கூட அவற்றைக் “கிண்டலடித்த – கண்டித்த” சம்பவங்களும் ஏராளமாக உண்டு.

அட்டைக் கத்தி வீரனின் அழுகை!

சக்களத்திச் சண்டை
சக்களத்திச் சண்டை : ஆட்சி எம்.ஜி.ஆரின் பூர்வீக சொத்தா?
பாசிச எம்.ஜி.ஆர் மூன்று தவணைகளாக பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்தார். முதல் மூன்றாண்டுகள் போலீசையும் அடக்குமுறைச் சட்டங்களையும் ஏவி ஏழை – எளியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர் – அரசு ஊழியர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரையும் அடக்கி ஒடுக்கிவிட்டார். கடைசியாக, சங்கம் வைக்கும் உரிமைக்காகப் போராடிய போலீசார் மீதே மத்தியப்படையை ஏவி ஒடுக்கினார். சந்தர்ப்பவாதமும் அரசியல் பித்தலாட்டமும் அம்பலப்பட்டு போகவே 1980 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டபோது எம்.ஜி.ஆர். நிலைகுலைந்து போனார்.
அதைத்தொடந்து, (சினிமாவில் வீரதீரமாகச் சண்டையிட்ட எம்.ஜி.ஆர்.) இரண்டு கண்களிலும் “கிளிசரினை” ஊற்றிக் கொண்டு தமிழக மக்களிடம் குடம் குடமாக கண்ணீர் வடித்தார். விவசாய சங்கத் தலைவரிடமும், போலீசு சங்கத் தலைவரிடமும் மண்டியிட்டார். மன்னிப்பு கேட்காத குறையாக சரணடைந்தார். ஏராளமாகப் பொய்யான வாக்குறுதிகளை வீசி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
மீண்டும் பதவி நாற்காலியில் அமர்ந்தவுடன் அத்தனையும் காற்றில் பறந்தது. அதிகார மமதை தலைக்கேற, மீண்டும் அந்த பாசிச வேதாளம் தமிழக மக்கள் மீது பாய்ந்தது. அரசியல் எதிரிகளையும், பத்திரிக்கைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. இதிலே வெற்றி பெற்ற பிறகு தமிழகத்தைத் தனது கட்சியின் ஊழல் “பேரரசாக” மாற்றுவதில் முழு மூச்சாக இறங்கினார். தனது பினாமிகளையும், சாராய சிற்றரசர்களையும், தனது புகழ்பாடும் விசுவாச ஒட்டுண்ணிக் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.
தனது அரசியல் – அதிகார அட்டூழியங்களுக்கும், பகற்கொள்ளைக்கும் வசதியாக இந்திராவின் இளைய பங்காளியாகவும் பாசிச பாதந்தாங்கியாகவும் மாறினார். இலஞ்ச ஊழலும், பாசிச அடக்குமுறையும் நிறுவனமயமானது – ஆட்சியின் ஒழுங்குவிதியானது. அதன் பிறகு அவரது ஆட்சியின்  அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க யாரும் துணியவில்லை. நோயுற்று நடைபிணமான நிலையில், அதைக் காட்டியே அனுதாப அலையை எழுப்பி, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், எம்.ஜி.ஆரின் எடுபிடிகள் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதற்கான உரிமை பெற்றவர்களாகிவிட்டனர். சட்டமன்றத்துக்குள் சர்வாதிகாரி பாண்டியனும், வெளியே மோகன்தாஸ் – தேவரம் கும்பலும் காட்டுமிராண்டித்தனமாக ஆட்சி நடத்தினர். சாதி, மதவெறியர்களும், சாராய- மாஃபியா – கடத்தல் தலைவர்களும் கட்டுப்பாடற்ற கொள்ளையில் இறங்கினர்.
பத்தாண்டு ஆட்சியின் கருப்பு சிவப்பு புள்ளிகள் மீது வெளிச்சம் போட்டுக் காட்டினாலே போதும். அவரது பாசிச, சேடிச கோமாளித்தனங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

  • எம்.ஜி.ஆர் - இந்து மதவெறி
    பகுத்தறிவுக்குச் சவக்குழி, இந்து மதவெறிக்குப் பிள்ளையார் சுழி
    எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே, முந்தைய அவசரநிலை ஆட்சியின் போது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் அவர்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தின் மீது போலீசும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பாய்ந்து தாக்கினர். மதுரை கலெக்டரே இரும்புத் தொப்பியும் கைத்தடியும் ஏந்தி மாணவர்களை அடித்து நொறுக்கினார். தப்பி ஓடிய மாணவர்களின் விடுதிகளுக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ரத்தக் காயங்கள்; 850 பேர் கைதாகி பொய்வழக்குகள்அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், மாநிலக் கல்லூரி, நெல்லை இந்திய மருத்துவக் கல்லூரி, தியாகராய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீசாராலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் தாக்கப்பட்டனர். பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலம் போனபோது ஊழியர்களாலும், போலீசாராலும் தாக்கப்பட்டனர்.சிறுபான்மையினரின் கல்லூரிகள் என்கிற பெயரில் நிர்வாகம் தம்மை ஒடுக்குவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்களும் புதுக்கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அக்கல்லூரி நிர்வாகங்களை எதிர்த்துப் போராடினர். எம்.ஜி.ஆர் அரசு, கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு மாணவ- மாணவிகளைத் தாக்கவும், ஆசிரியர்களைப் பழிவாங்கவும் துணை போனது. எல்லாவற்றுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான எம்.சி.ராஜா விடுதியின் ஊழல்களை எதிர்த்தும், கல் – மண் கலந்த உணவு, அடிப்படை வசதி மறுப்பு ஆகியவற்றை எதிர்த்தும் அவர்கள் பலதடவை முறையிட்டனர். கடைசியாக, அமைதியாக ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கியது போலீசு. தப்பி ஓடி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை எம்.ஜ.ஆர். ரசிகர்கள் இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின், சோடா பாட்டில்கள் சகிதமாகப் புகுந்து தாக்கினர்.  விடுதியைச் சூறையாடினர்.
தொழிலாளிகள் மீது எம்.ஜி.ஆர். குண்டர் படையின் தாக்குதல்!
  • 1974-க்குப் பிறகு ஊதிய உயர்வே கண்டிராத பஞ்சாலைத் தொழிலாளர்கள் 77-78-ல் வேலை நிறுத்தத் தாக்கீது கொடுத்தபோது எம்.ஜி.ஆர். அரசு கண்டுகொள்ளவேயில்லை. வேலைநிறுத்தம் தொடங்கிய இரண்டாம் நாளே போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடுவதாக எம்.ஜி.ஆர். அரசு முடிவு செய்தது. இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலீசை ஏவித் தடியடிப் பிரயோகம் நடத்தியது; நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர் மீது பொய் வழக்குகள் போட்டது.  பின்னர், தொழிலாளர்களுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் விலக்கிக் கொள்ளப் போவதாகத் திடீரென்று ‘சுதந்திர’ தினத்தன்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு செய்தார். ஆனால், போலீசார் எந்த வழக்கையும் விலக்கிக் கொள்ளவில்லை.தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று யார் போராடினாலும், சட்டம் அதன் வேலையைச் செய்யும் என்று மிரட்டினார் எம்.ஜி.ஆர். ஆனால், இந்திரா கைது செய்யப்பட்டதையொட்டி காங்கிரசு குண்டர்கள் வெடிகுண்டு வீசியும், பஸ்களைத் தாக்கியும் பலரைப் படுகொலை செய்தும் வெறியாட்டம் போட்டுக் கைதானவர்களை விடுதலை செய்தார். 1972-ல் தனிக்கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க. வினர் நடத்திய காலித்தனங்களுக்காக அவர்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட்ட எம்.ஜி.ஆர்., பஞ்சாலைத் தொழிலாளருக்கு எதிராகப் போடப்பட்ட பொய் வழக்குகளை விலக்கிக் கொள்ளவில்லை.
04-mgr-2
  • 1978 அக்டோபரில் பஸ் தொழிலாளர் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது. பஸ் தொழிலாளர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காணாது தன்னிச்சையாகக் குறைந்தபட்ச போனஸ் தருவதையே எம்.ஜி.ஆர். அரசு வழக்கமாகக் கொண்டிருப்பதை எதிர்த்து இரண்டே நாட்கள்தான் வேலைநிறுத்தம் செய்தனர். அதற்குள் ‘மினிமிசா’வையும் அவசர சட்டத்தையும் எம்.ஜி.ஆர். அரசு ஏவியது. 5000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கருங்காலிகளையும், போலீசையும், எம்.ஜி.ஆர். ரசிகர்களையும் வைத்து பஸ்கள் ஓட்டப்பட்டன. பஸ்களை நிறுத்துபவர்களைக் கண்டதும் சுட எம்.ஜி.ஆர். உத்திரவு போட்டார். வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல, அதை ஆதரிப்பவர்களையும், நிதி அளிப்பவர்களையும் கூட சிறையிலடைக்கும் சட்டம் கொண்டு வந்தார். “பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்கிற பெயரில் – எம்.ஜி.ஆரின் குண்டர்படை  – அடையாள அட்டைகளும், வெள்ளைச் சட்டைகளும் அணிந்த தொண்டர்கள் என்கிற பெயரில் – பஸ் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளாக எம்.ஜி.ஆர் அரசு ஒருதலைப்பட்சமாக அறிவித்துத் தரும் குறைந்தபட்ச போனசுதான் கொடுக்கப்பட்டது.
  • பஸ் தொழிலாளர் போட்டத்தின் போது தீவிரமாக நடந்து கொண்டிருந்தன டி.வி.எஸ் – டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் போராட்டங்கள். ஆரம்ப காலத்திலிருந்து தங்கள் மீது நிர்வாகம் திணித்திருந்த கருங்காலி காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத் தலைமையைத் தூக்கியெறிந்து போலி கம்யூனிஸ்டு வி.பி. சிந்தன் தலைமையை சென்னை – பாடி டி.வி.எஸ். தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். மதுரையிலிருந்து  குண்டர்படையை இறக்குமதி செய்து ஆலைக்குள்ளேயே தொழிலாளர்களைத் தாக்கியது நிர்வாகம்.தொழிலாளருக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில், பாடி – வில்லிவாக்கம் – அம்பத்தூர் தொழில் வட்டாரமெங்கும் போலீஸ் முகாம்கள் அமைக்கப்பட்டன. டி.வி.எஸ். ஆலைக்குள் நிர்வாகத்தின் குண்டர் படை திரட்டப்பட்டது. நான்கு மாதக் கதவடைப்புக்குப் பிறகு, 350 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்த பிறகு நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோரும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்தின் குண்டர் படையும், போலீசும் தொழிலாளர்களை மிரட்டி அரசு பஸ்களில் கடத்திப் போய் டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தியை நடத்தினர்.டி.வி.எஸ். ஆலைக்கு வெளியே போடப்பட்ட தொழிலாளர் பந்தல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. போராடும் தொழிலாளர்களை குண்டர்கள் தாக்கி அரிவாளால் வெட்டினார்கள். போலீசார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். டி.வி.எஸ். பாணியைத் தொடர்வது என்று மற்ற முதலாளிகள் தீர்மானிக்கவே, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் ஆலையில் தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கதவடைப்பும் தொடங்கியது. சென்னை நகரத் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்தனர்.04-mgr-3மதுரை மாநகரத் தேர்தலுக்குப் பிறகு டி.வி.எஸ்., டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் பிரச்சிைனையைத் தீர்க்காமல் அவர்களை ஒடுக்குவதில் இறங்கியது எம்.ஜி.ஆர். அரசு. 1978 அக்டோபர் 16-ல் மாநில மற்றும் மத்திய போலீசை ஏவி தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி அமைதியாக மறியல் செய்த தொழிலாளர்கள் மீது பாய்ந்தது. ஆத்திரமுற்று வேலை நிறுத்தத்தில் இறங்கி வெளியேற முயன்ற “டன்லப்” தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. “டன்லப்” தொழிற்சங்க அலுவலகத்திலிருந்த குசேலர், கோபு, சுப்பு ஆகிய தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்குகள் போட்டது.போராட்டத்தை உடைக்கும் எம்.ஜி.ஆர்.- டி.வி.எஸ். முதலாளியின் அராஜக வேலைகளுக்கு எதிராக போலி கம்யூனிஸ்டு சங்கமான சி.ஐ.டி.யு. தலைவர் அரிபட் மற்றும் இருவர் உயர் நீதிமன்றத்தருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஐந்தாம் நாள் “வலது” கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்கள் கோபு, சுந்தரம் தலைமையில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க கோட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார்கள் டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் குடும்பத்தினர். எம்.ஜி.ஆர். அரசின் உத்தரவுப்படி, அவர்களை வழிமறித்து கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தியது மத்திய ரிசர்வ் போலீஸ்படை. பெண்களும், குழந்தைகளும், போலி கம்யூனிஸ்டுத் தலைவர்களும் படுகாயமுற்றனர். அதேசமயம், உயர்நீதிமன்றத்தருகே உண்ணாவிரதமிருந்தவர்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்படை தாக்கியது. 45 நிமிடம் வெறியாட்டம் போட்டு, போலீஸ் நிலையத்துக்கு அருகாமையில் இருந்த உண்ணாவிரதப் பந்தலைக் கொளுத்தியது; தொழிலாளர்களும் தலைவர்களும் சிதறி ஓடினர்.எம்.ஜி.ஆர். அரசின் இந்தக் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து 1978 அக்.23-ம் தேதி தமிழகம் தழுவிய கடையடைப்பு நடத்துவதாக காங்கிரசு மற்றும் ஜனதா தவிர அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தன. கடையடைப்பை முறியடிப்பதாக எம்.ஜி.ஆர் யுத்தப் பிரகடனம் செய்தார். 10 நாட்களுக்குக் கல்லூரிகள் மூடப்பட்டு வேறு மாநில மற்றும் மத்திய போலீசுப் படைகள் குவிக்கப்பட்டன. போராட்டக்காரர்களில் 10,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
    எம்.ஜி.ஆர் அடிமைகள்
    சுயமரியாதை இல்லாத தோட்டத்து அடிமைகள்!
    எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவியாபாரிகள், கைத்தொழிலாளர்கள், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரையும் கடை அடைப்பை முறியடிக்கும்படி பிரச்சாரம் செய்யும் விளம்பரத்தைப் பத்திரிகைகள், வானொலி  மூலம் எம்.ஜி.ஆர். நடத்தினார். மன்னார்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு 22 பேர் காயமடைந்தனர். பல நகரங்களிலும் அ.தி.மு.க. குண்டர்படை வெறியாட்டம் போட்டது. ஆனாலும், மாநிலந்தழுவிய கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது.
  • இனி “டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ்” பாணியிலே தொழிலாளர்களை ஒடுக்குவது என்று முதலாளிகளும் எம்.ஜி.ஆர். அரசும் தீர்மானித்தனர். ஆளும் கட்சித் தலைமையிலான “அல்ட்ரா மரைன்” ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் கூட பலாத்காரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதேகதிதான் போராடிய கோவை லட்சுமி மிஷின் டூல்ஸ், மேட்டூர் மில்ஸ், மின் வாரியத் தொழிலாளர்களுக்கும் நேர்ந்தது. அதன் பிறகு குறிப்படத் தகுந்த அளவு உறுதியாக நடந்தது திருச்சி “சிம்கோ மீட்டர்ஸ்” ஆலைத் தொழிலாளர் போராட்டம்தான். இங்கும் கருங்காலி ஐ.என்.டி.யு.சி.யின் தலைமையும், துரோக ஒப்பந்தமும்  தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து சி.ஐ.டி.யு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர்.டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ் போராட்டங்களை முறியடித்த மமதை, அமெரிக்காவில் தனக்கு “ராஜ உபசாரம்” செய்த “சிம்கோ மீட்டர்ஸ்” முதலாளியிடம் விசுவாசம் காரணமாக போலீசையும், அ.தி.மு.க. வெண் சட்டைப் படையையும் “சிம்கோ” தொழிலாளர் மீது ஏவினார். தொழிலாளர்கள் மீது மட்டுமின்றி, சங்கத்தலைவர் உமாநாத்  வீடும் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டது. திருச்சி நகர மக்கள் பலர் தொழிலாளர் பக்கம் நின்று ஒத்துழைத்தனர்.
    14 விவசாயிகள் சுட்டுக்கொலை!
  • மீனவர் துப்பாக்கிச் சூடு
    பிணந்தின்னிகள் : மெரினா மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!
    தொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பாசிச பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது. கடையடைப்பை முறியடிக்கும் வெறியுடன் போலீசைக் குவித்து, பஸ்களை ஓட்ட முயன்றது, எம்.ஜி.ஆர். அரசு. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 14 விவசாயிகள் பலியாயினர். நெல்லை – சங்கரன் கோவில் அருகே ஒரு துணை போலீஸ் அதிகாரி விவசாயப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதால், ஆத்திரமுற்று விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் பிறகு எம்.ஜி.ஆரின் போலீசு, விவசாயிகள் மீது வெறித்தனமாகப் பாய்ந்தது. சென்னை – திருவள்ளூர் அருகே வள்ளியூர் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து கிழவிகள், சிறுமிகள் உட்பட பெண்களை வெளியே இழுத்துப் போட்டு மிருகத்தனமாகத் தாக்கியது. பெண்களை லாரிகளில் ஏற்றி, உணவு, தண்ணீரின்றி கொளுத்தும் வெயிலில்  நாள் முழுவதும்  நிறுத்தித் துன்புறுத்தி சென்னை மத்திய சிறையில் அடைத்தது. தாக்குண்ட பெண்களைத் தனது பெண் அமைச்சருடன் போய் பார்த்து ஆறுதல் சொல்லி ஏய்க்க முயன்றார், எம்.ஜி.ஆர். போலீசு அவர்களைக் கற்பழிக்காது நல்ல முறையில் நடந்து கொண்டதற்குப் பாராட்டினார். பெண்களை முன்னிறுத்தும் கோழைகள் என்று அவதூறு பேசி, விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது கொலைக்குற்ற வழக்குப் போட்டார். இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்குவதாக மிரட்டினார்.
அரசு ஊழியர்களைத் தாக்கிய அ.தி.மு.க. குண்டர்கள்!

  • தனது பாசிச ஒடுக்குமுறைகள் மூலம் இரத்த ருசி பார்த்த எம்.ஜி.ஆர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும் பாய்ந்தார். ஊதிய உயர்வு, ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் பிறகோரிக்கைகளுக்காக 1978 மார்ச்சில் மாநில அரசு ஊழியர்கள் போராடியபோது தனது கட்சி தலைமையில் போட்டிக் கருங்காலி சங்கத்தை தொடங்கினார். 30 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. “விவசாயப் பெண்களுக்கு மானத்தைக் காத்துக் கொள்ள துணி கூட இல்லை, உங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமா? பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று எச்சரித்தார். பொதுமக்கள் என்கிற போர்வையில் அ.தி.மு.க. குண்டர்களை ஏவி அரசு ஊழியர்களைத் தாக்க முயன்றார். ஆயுதங்களுடன் வந்த குண்டர்களைப் பிடித்துக் கொடுத்த போதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.வேலை நிறுத்தத்தை எதிர்க்கும்படி அரசு ஊழியர்களின் மனைவிமார்களுக்கு கோரிக்கை விட்டார், எம்.ஜி.ஆர். கைதுகள், வேலைநீக்கங்கள், தற்காலிக ஊழியர்கள் வேலைநீக்கம்  – என பழிவாங்குவதில் ஈடுபட்டார். வேலைநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை எடுக்கப் போவதாகவும் அறிவிப்புகள் கொடுத்தார். அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டு உருவாகி உறுதிப்பட்டவுடன் சற்றுப் பின் வாங்கிக் கொண்டு, சில்லரைச்  சலுகைகளை அறிவித்தார். போராட்டத்துக்குத் தலைமையேற்ற சிவ.இளங்கோ தலைமையிலான கும்பலை விலைக்கு வாங்கினார்.
  • எம்.ஜி.ஆர் : அமைச்சர்கள் பதவி பறிப்பு
    அமைச்சர்கள் பதவி பறிப்பு : இதற்கும் ஜெ.யின் முன்னோடி எம்.ஜி.ஆரே!
    பரந்துபட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக யாரைப் பயன்படுத்தினாரோ, அந்தப் போலீசாருக்கு எதிராகவே எம்.ஜி.ஆரின் தாக்குதல் திரும்பியது. பல்வேறு மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் உருவானதைத் தொடர்ந்து தமிழகப் போலீசாரும் நைனார்தாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அதைத் தடை செய்துவிட்டு தானே தனது கருங்காலிகளைக் கொண்ட மூன்று சங்கங்களை அமைத்தார். அதன் கீழ்வர மறுத்த போலீசார் போராட்டத்தில் குதித்தனர். மத்திய ரிசர்வ் படையை வைத்து போராடிய போலீசாரை வேட்டையாடினார் எம்.ஜி.ஆர். போலீஸ் குடியிருப்புகளில் புகுந்து பெண்கள், குழந்தைகளைத் தாக்கினார். சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர். அவர்களை வேலைநீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர்., சங்கம் வைக்கும் முயற்சியை முறியடித்தார்.போலீசுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது, ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான தேர்தல் வாக்குறுதி வழங்கினார், எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு நிலமும், கல்லுடைப்போர், மூட்டை சுமப்போருக்கெல்லாம் மாதச் சம்பளமும், வீட்டுக்கொருவருக்கு வேலை, இல்லையானால் 100 ரூபாய் ஈட்டுத் தொகை, ரேசனில் போடும் 5 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ இலவசம், ஏழைகள் – முதியோருக்கு ஓய்வூதியம், வேலையில்லா பட்டதாரிகள், ஆசிரியருக்கு நிவாரண நிதி, தாலிக்குத் தங்கம், வேலையில்லாத நாட்களில் கூலி விவசாயிகளுக்கு ஒரு ரூபாயும் ஒருகிலோ அரிசியும் என்று எவ்வளவோ வாக்குறுதிகள் – அவ்வளவும் காற்றில் பறக்க விடப்பட்டன.
  • பெரியாரின் பகுத்தறிவு – சமூக சீர்திருத்த இயக்கங்களைத் தொடர்ந்து சற்று வரம்புக்குள் இருந்த சாதி, மதவெறியர்கள், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு புதிய நம்பிக்கை – வேகத்துடன் சாதி-மதக் கலவரங்களில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து ஒருவார காலத்துக்கு விழுப்புரம் நகரில் தாழ்த்தப்பட்டவர்கள் வேட்டையாடப்பட்டனர். 12 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குடிசைகள் கொளுத்தப்பட்டன. மண்டைக்காடு, புளியங்குடி, மீனாட்சிபுரம், பேர்ணாம்பட்டு, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சாதி-மதக் கலவரங்கள் என்கிற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களும், மீனவர்களும் தாக்கப்பட்டனர். இந்து முன்னணியின் பெயரில், எம்.ஜி.ஆர். கட்சியினரின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.பண்ணையார்களும், அ.தி.மு.க. காரர்களும், முதலாளிகளும், போலீசாரும் பல கொலைகள் புரிந்தனர்.  தஞ்சை விவசாய சங்கத் தலைவர் வெங்கடாச்சலம், பண்ணையார்களால் கொல்லப்பட்டார். நாகை எம்.பி. முருகையன் அ.தி.மு.க. காரனால் கொல்லப்பட்டார். மதுராந்தகம் அ.தி.மு.க. அலுவலகத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டார். கோயில் நகை கொள்ளைகளில் அ.தி.மு.க.வினர் சம்பந்தப்படிருந்தனர்.திருச்செந்தூர் கோவிலில் நகை சரிபார்க்கும் அதிகாரி கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கு  எம்.ஜி.ஆர் அரசு முயலவேயில்லை; காரணம் தெரிந்ததே!
  • மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறத் தொடங்கவிட்டது, எம்.ஜி.ஆர் அரசு. போலீஸ் “லாக்-அப்” சித்திரவதை கொலையில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகப் போலீசு, சென்னை – வியாசர்பாடியில் சந்தேகத்தின் பேரில் இழுத்துப்போன ஒரு இளைஞரை அடித்துக் கொன்றது. நியாயம் கேட்கத் திரண்ட பகுதி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரைக் கொன்றது.
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு! நக்சல்பாரிகள் நரவேட்டை!

  • உலக வங்கி உத்தரவின் கீழ் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாக முடிவு செய்து பெரும் போலீஸ் படையுடன் போய் இரவோடு இரவாக மீனவர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்காக, ஆத்திரத்தைத் தூண்டி துப்பாக்கி சூடு நடத்தி, பலரைக் கொன்றது; மீனவர் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடியது.பஸ் வசதி கோரிப் போராடிய மக்களைக்கூட விட்டு வைக்கவில்லை. பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மூவரைக் கொன்றது. பெரும் போலீஸ் படை கிராமத்துக்குள் புகுந்து கண்மண் தெரியாமல் தாக்கியது. மிரண்டு போன மக்கள் தப்பி ஓடி, காடுகளுக்குள்  தஞ்சம் புகுந்தனர்.
  • 04-mgr-4சாதாரண மக்கள் மீது இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாசிச எம்.ஜி.ஆர். கம்யூனிச புரட்சியாளர்களை விட்டு வைப்பாரா? வட ஆற்காடு, தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கம்யூனிச புரட்சியாளர்கள் 21 பேரை மோகன்தாஸ் – தேவாரம் போலீஸ் கும்பலை ஏவி படுகொலை செய்துவிட்டு, “நக்சலைட்டுகளுடன் போலீசு மோதல்” என்று கதை கட்டினார். நக்சலைட்டுகளைப் பூண்டோடு ஒழிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். சபதமேற்றார். போலீசின் படுகொலைகளை விசாரிக்கப்போன மக்கள் உரிமை அமைப்பினரையும், பத்திரிக்கையாளரையும் கூட போலீசு தாக்கியது. மாநிலம் முழுவதும் பலர் மீது தேச விரோதப் பொய் வழக்குப் போட்டது.வரம்பில்லாத இலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகளில் மூழ்கிக் கிடந்த எம்.ஜி.ஆர். அவற்றை அம்பலப்படுத்திக் குற்றஞ்சாட்டுவோரையே பழிவாங்கும் சட்டம் கொண்டு வந்தார். அதன்படி குற்றஞ்சாட்டுவோர்தான் அவற்றை நிரூபிக்க வேண்டும்; தவறினால், அவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்று மிரட்டினார். கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, அதை விலக்கிக்கொண்டார்.அரசை விமர்சிக்கும் “அப்பாவி” பத்திரிக்கைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. ஆபாசத் தடைச் சட்டம், பத்திரிக்கைத் தடைச் சட்டம் என்கிற பெயரில் சுவரொட்டி, கருத்துப் படம், பாடுவது, பேசுவது, எழுதுவது கூட கிரிமினல் குற்றம் என்கிற கொடிய அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார். குதிரைகளை விரட்டுவது, பட்டம் விடுவது, வாகனங்கள் ஓசை எழுப்புவது, வாகனங்களை சாலைகளில் நிறுத்துவது, பரீட்சைகளில் காப்பி அடிப்பது ஆகியவைகூட கிரிமினல் குற்றங்கள் என்று சட்டம் கொண்டு வந்தது – ஆகியவையெல்லாம் எம்.ஜி.ஆர் அரசின் சாதனைகள்!
  • அ.தி.மு.க. ஆரம்பித்ததிலிருந்து தாய்மார்களுக்காக முதலை கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர், சாராயம், லஞ்ச ஊழலின் பரம எதிரி போல நடித்தார். ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்குச் சட்டத்தைக் கடுமையாக்கினார். இது கள்ளச் சாராய பெரும் புள்ளிகளுக்கும், போலீசாருக்கும் கொள்ளையடிப்பதற்கு மிகவும் வசதியாகிப் போனது. கள்ளச் சாராயத்தையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு பணம் கட்டி உரிமை பெற்றவர்களுக்கு மட்டும் சாராயம் குடிக்க அனுமதி என்றார். அப்புறம், படிப்படியாக கள்ளு – சாராயக் கடைகளை முழுவதுமாகத் திறந்து விட்டார். சாராயத் தொழிற்சாலை வைக்கும் உரிமை வழங்கியதில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி அம்பலப்பட்டு போனார்.மதம் ஏழை – எளிய மக்களை ஏய்க்கும் போதையாக இருப்பதைப் போலவே, சினிமா ஒரு கவர்ச்சிப் போதையைத் தருவதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அதைக் கொண்டு கிராமப்புற விவசாயிகளையும், நகர்ப்புற உதிரிப் பாட்டாளிகளையும் ஏய்த்தார். போலி கம்யூனிஸ்டுகளின் கூட்டு, பிற பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற உதவியது. சத்துணவு உட்பட ஏழைகள் மீதான அவரது கரிசனையும் தான தருமங்களும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலர்களுக்கே உரித்தான அடிமைகளின் பாலான பரிவுதான்.அவசரநிலை பாசிச ஆட்சியை ஆதரித்த எம்.ஜி.ஆர். அதன் கொடுமைகளை விசாரித்த ஷா, அனந்த நாராயணன் மற்றும் இஸ்மாயில் கமிசன் அறிக்கைககளைக் குப்பைத் தொட்டியில் வீசினார். சென்னை மத்திய சிறை சித்திரவதைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட பொன்.பரமகுரு, வித்யாசாகர் உள்ளிட்ட போலீசு குற்றவாளிகளுக்குப் பதவி உயர்வளித்தார். ஜனதா ஆட்சியானாலும், அது கொண்டு வந்த தொழிலாளர் விரோத தொழிலுறவு மசோதா போன்றவற்றை ஆதரித்தார். தாய்க்குலத்தைப் பற்றி நீலிக்கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர். ராஜீவ் கொண்டுவந்த பிற்போக்குத்தனமான முஸ்லீம் மண முறிவு (ஷாரியத்) சட்டத்தை ஆதரித்தார்.
“ஐயா, தருமவானே, நீங்களாகப் பார்த்து ஏதாவது தான தர்மம் கொடுங்கள்” என்று கையேந்தி நிற்பவர்களுக்கு பரோபகாரியாகவும், “இது எங்கள் உரிமை” என்று போராடுபவர்களுக்குப் பரம எதிரியான பாசிஸ்டாகவும் விளங்கியவரே எம்.ஜி.ஆர்.!
- ஆர்.கே.
(புதிய ஜனநாயகம், 1-5, ஜனவரி 1988)




அஷ்ரப்

21 December 2014

இது தான் இஸ்லாம்!


தி௫ ஜவஹர்லால் நே௫ பிரதமராக இ௫ந்த காலகட்டத்தில் இரண்டு நாள் அரச முறை பயணமாக இந்தியா வந்த சௌதி அரேபியா நாட்டு மன்னர் வெள்ளி கிழமை தொழுவதற்க்காக பாதுகாப்பு படையினரால் பள்ளிவாசல் (மஜ்ஜித்) அழைத்து செல்லப்பட்டார்
மன்னர் செல்வதற்க்கு முன்பே தொழுகைக்கு எல்லோ௫ம் நின்றுவிட்டார்கள் மஜ்ஜித்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் தொழுது முடிந்தவுடன் பிச்சை எடுக்க வசதியாக எல்லோ௫ம் நின்ற பிறகு கடைசியாக பின் வரிசையில் நின்று கொண்டார்கள் அப்போது இந்திய பாதுகாப்பு படையினர் சௌதி மன்னரை முன் வரிசைக்கு அழைத்து செல்ல முயன்றார்கள்
மன்னர் பாதுகாப்பு படைகளை கடிந்துவிட்டு இஸ்லாத்தில் இது போன்ற செயல்கள் கிடையாது படைத்தவனின் முன் அனைவ௫ம் சமம் என்று கூறிவிட்டு பின் வரிசையில் பிச்சைகாரர்களுடன் ஒன்றாக நின்று தோலோடு தோல் சேர்ந்து தொழுதுவிட்டு தி௫ம்பினார் சௌதி அரேபிய நாட்டு மன்னர்
-
அஷ்ரப்

13 December 2014

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி?

அதனால் ஏற்படும் நண்மைகள் மற்றும் தீமைகள்

ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT செய்வது என்று கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன என்ற கேள்வி பொதுவாக பலரிடமும் காணப்படுகிறது
அதற்க்கான தெளிவான பதிப்புதான் இது.

ஆண்ட்ராயிட் மொபைலை உபயோகிப்பவர்களின் எண்னிக்கை உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதற்க்கான APPLICATIONகளின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது ஆனால் பல முக்கியமான APPLICATIONகள் ROOT செய்யப்பட்ட மொபைல்களில் மட்டுமே இயங்கக்கூடிய தன்மையை பெற்றிக்கிறது உதாரணமக TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER இன்னும் பல அதனால்தான் மொபைலை ROOT செய்ய பலரும் விரும்புகிறார்கள் ஆனால் அதை செய்வதினால் நன்மைகள் மற்றும் கிடைக்கப்படுவதில்லை தீமைகளும் அதில் இருக்கின்றது என்பதை தெழிவு படுத்ததான் இந்த பதிப்பு இதை எவ்வளவு சுருக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு முயற்ச்சிக்கிறேன் உங்களின் பயனுக்காக

ROOT செய்வதினால் ஏற்படும் தீமைகள்:

இதை தெறிந்துகொள்வதற்க்கு முன்பு ROOT என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள் பொதுவாக ANDROID SYSTEN FILEகள் அனைத்தும் மொபைல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதனால் SYSTEM FILEஐ உங்களால் COPY செய்யவோ அதில் எதாவது ஒரு FILEஐ PASTE செய்யவோ முடியாது . ஆனால் ROOT செய்வதனால் SYSTEM FILEஐ முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்க்கு SUPER USER உதவியுடன் கொண்டுவர முடியும்
இதனால் நீங்கள் ஒரு FONTஐ கூட எளிமையாக இன்ஸ்டால் செய்திட முடியும் EXAMBLE சிலரது மொபைல்கலில் தமிழ் FONT SUPPORT ஆவது இல்லை அவர்கள் இதனை செய்வதனால் எளிமையாக உங்களது மொபைலில் தமிழ் FONTஐ INSTALL செய்யலாம்

ROOT செய்வது எப்படி:

MOBILEஐ ROOT செய்வதற்க்கு உங்களிடம் கனினி இருப்பது அவசியம். பின்பு உங்களது மொபைலின் DATA CABLEலும்
1.முதலில் உங்களது கனினியில் இந்த KINGO ANDROID ROOT ஐ
டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2.உங்களுடைய மொபைலில் SETTINGS பகுதிக்கு சென்று DEVELOPER OPTIONS > USB DEBUGGINGஐ ENABLE செய்துகொள்ளுங்கள்
3.உங்களது மொபைலிற்க்கான USB DRIVERஐ கனினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் அவசியம் இல்லை )
4.இப்பொழுது KINGO ANDROID ROOTERஐ OPEN செய்து

5.கனினியுடன் உங்களது போனை DATA CABLE வழியாக இனையுங்கள் சிறிது நேரத்தில் KINGO ANDROID ROOT உங்களது போன் MODEL எண்ணை காண்பித்து ROOT செய்ய அனுமதி கேட்கும் அனுமதி பெறப்பட்டதும் ROOT செயல்பாடு 2 நிமிடங்கள் நடைபெரும் முடிவில் உங்களது போன் RESTART ஆகும் அவ்வளவுதான் இப்போது MENUவில் சென்று பாருங்கள் SUPER USER என்ற APPLICATION INSTALL செய்யப்பட்டிருக்கும் அதுதான் உங்களது போன் ROOT செய்யப்பட்டிருப்பதற்க்கான அடையாளம்

தீமைகள்

ROOT செய்வதினால் SYSTEM FILE உங்களின் கட்டுப்பாட்டிற்க்கு வந்துவிடும் என்பதால்PROGRAMING ERASER அதாவது VIRUS உங்களது போனை எளிமையாக தாக்கக்கூடிய அபாயம் இருக்கிறது ஆதலால் மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்.

ROOTசெய்யப்பட்ட MOBILEகளுக்கு அதனுடைய நிறுவனததாரிடமிருந்து WARRENTY உங்களுக்கு கிடைக்கப்பெற மாட்டாது அதனால் WARRENTY காலம் முடியும் தறுவாயில் இதனை செய்வது நல்லது.

இந்த இரண்டு காரணங்கள் மட்டுமே இதற்கான முடுக்கு ஆனால் இதனை செய்வதினால் பல நன்மைகள் இருக்கிறது

-
அஷ்ரப்

ஆண்ட்ராய்ட் மொபைலில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி..?

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தங்கள் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் பயன்படுத்துவோர், அதிக ஜாக்கிரதையுடன் இயங்க வேண்டும் என Computer Emergency Response TeamIndia (CeRTIn) கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய வெளியில், இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது. இது ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது. இந்த வைரஸ், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது. இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் காணப்படும் சரியற்ற குறியீட்டு வழுவே ஆகும்.
இதனைப் பயன்படுத்தியே, இந்த வைரஸ் பரவுகிறது. இவை இந்த சாதனங்களில், பல அப்ளிகேஷன்களில், கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப் புகுத்துகின்றன. இதனால், அந்த அப்ளிகேஷன்களின், ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை. பயனாளர், தான் பயன்படுத்துவது, ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்துகையில், கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகளின் அடிப்படையில் தகவல்கள் திருடப்படுகின்றன. இமெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.

இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள பைல்களின் அதே பெயரில், புதிய பைல்களைப் பதிக்கிறது. இதனால், எந்த சோதனைக்கும், முதலில் உள்ள ஒரிஜினல் பைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு பைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது. அது மட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது.

இதற்கு எதிராக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் பிரிவு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். நம்பிக்கை யற்ற இணைய தளங்களுக்கான லிங்க்கினை, கிளிக் செய்திட வேண்டாம். மொபைல் ஆண்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதனையும் சோதனை செய்திடவும். நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோட் செய்திட வேண்டாம். முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்த பின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்ட்லோட் செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற தளங்கள் தரும் அப்ளிகேஷன்களையே பயன்படுத்தவும்.

-
அஷ்ரப்

சரவணா ஸ்டோர்ஸ் – ஓர் ஆறு தட்டு சவக்கிடங்கு




சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘திருநெல்வேலிகாரங்கதான்நிறைய இருப்பாங்கல்ல.’’
‘‘இப்போ அப்படி இல்ல அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்.’’
‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’ ‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
‘‘ஷிப்டா அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவு தான்..’’
‘‘சாப்பாடு?’’
‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேராபோய் சாப்பிட்டு வருவோம்.’’
‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’
‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா… அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘ம்ஹூம், உட்காரக்கூடாது. வேலையில சேர்க்கும் போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’
யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.
‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500 ரூபாய்.’’
‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது… அதெல்லாம் உண்டா?’’
‘‘இல்லண்ணே… அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’
‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’
‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘ஆமாம்.’’ ‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’
‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’ ‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’
‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா ?’’
‘‘அதான் சொல்றனேண்ணே… லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும் பாலும் லீவு போட மாட்டோம்’’
‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’
‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்து ட்டுப் போவீங்களா?’’ www.puradsifm.com
‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’
‘‘ம்ஹூம்… அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘தெரியலை..’’
‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘நெல் விவசாயம்..’’
‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’
‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’
‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’
‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’
‘‘இங்க எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’
கனத்த மனதுடன் அப்பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்தபிரம்மாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.

- சரண்குமார்
*
நன்றிசரண்குமார்

*
சரண்குமார் என்பவர் முகநூலில் பகிர்ந்த இந்த கண் ணீர் கதையை படிக்கும்போது அங்காடித் தெரு என்ற திரைப்படம் நினைவுக்குவருகிறது. அத்திரைப்படத்தி ல் எதையுமேமிகைப்படுத்தாமல், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் இது போன்ற ஏழைப்பணியாளர்களின் கதையையும் அங்கு நடக்கும் இதுபோன்ற கொடூரங்களையும் வசந்தபாலன் அப்படியே காட்டியிருக்கிறார்.
இதுபோன்ற கொடுமைகள் நடப்பது சரவணா ஸ்டோர்ஸில் மட்டுமல்ல பெரிய வணிக நிறுவனங்களில் நடப்பவையே!
சினிமாக்காரன் கண்களுக்கு தென்பட்ட இக்கொடுமை அரசாங்க அதிகாரிகளின் கண்களுக்கு தெரியாமல் போனது ஏனோ? அல்லது தெரிந்தும் கண்ணிருந்தும் குருடர்களாக சுயநலமாக வாழ்கிறார்களா?

-
அஷ்ரப்

6 December 2014

என்றும் நினைவில் 6 டிசம்பர்




எங்களின் இடத்தை (பாபர் மசூதியை) பெரும்பான்மை கொண்ட ஒரு கும்பல் இடிக்கிறது...
நாங்கள் உடமையை பறிகொடுத்தோம்...

காவல்துறையும்,ராணுவமும் எங்களை குற்றவாளியாக சித்தரித்தது...
அங்கு நாங்கள் விரட்டியடிக்கப்பட்டோம்...

அரசாங்கம் எங்களை இரண்டாம் தர குடிமகனாக நினைத்தது...
அங்கு நாங்கள் ஒடுக்கப்பட்டோம்...

நீதிமன்றம் கட்டப்பஞ்சாயத்து செய்து எங்களை வஞ்சித்தது...
அங்கு நாங்கள் நசுக்கப்பட்டோம்...

ஆக,ஆயுதம் ஏந்துவதற்கான அத்தனை காரியமும் நடந்தாலும் இன்னும் எங்கள் முஸ்லிம் இனம் ஆயுதத்தை தொடவில்லை...

ஒரு சில உணர்ச்சி வசப்பட்டவர்கள் தவறான முடிவை நோக்கி சென்றாலும் அவர்களை ஒதுக்கி ஓரம்தள்ளி நாங்கள் ஜனநாயக வாதிகள் என்பதை 22 ஆண்டுகளாக நிரூபித்து வரும் ஒரு கூட்டத்தை பார்த்து தீவிரவாதிகள் என்று சொல்வது பெற்ற தாயை வேசி என சொல்வதற்கு சமம் இல்லையா?

ஒருவேளை முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவோ அல்லது இஸ்லாம் தீவிரவாதத்தை போதித்திருந்தாலோ பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஒரு வாரத்தில் இந்தியா என்னும் நாடு உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்காதா?

பத்து கோடி பேரில் இருந்து ஆயிரம் பேர் உயிரை வெறுத்து கிளம்பினால் என்னவெல்லாம் நடந்திருக்கும்?

ஆனால் முஸ்லிம்கள் நாங்கள் இறைவனையும்,இந்த நாட்டின் சட்டத்தையும் மதித்து இன்று வரை அமைதியான முறையில் போராடி வருகிறோம்....

அத்தகைய எங்கள் மக்களுக்கு ஆதரவும்,உற்சாகமும்,உத்வேகமும் கொடுக்க வேண்டிய கடமையும்,கட்டாயமும் நம்மில் அமைதியை நேசிக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது....

அஞ்சுவதும் அடிபனிவதும் ஏக இறைவனுக்கே....
இஸ்லாமியன் இறப்பை எதிர்நோக்கியவன்...


-
அஷ்ரப்

பாபர் மஜித் உண்மை வரலாறு

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை...!!!

பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்து சகோதரர்கள் முதல் அனைவரும் உணர வேண்டும்...
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்....!!!

வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்

”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.

1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.

1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.

எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்....!!!!

மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.

துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.

இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.

இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்....!!!

ஒன்றுபடுவோம்
இறையில்லத்தை மீட்போம்..!!!

பாபர் கோவிலை இடிப்பவரா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா????
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார்.
அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல....!!!
ஒன்றுபடுவோம்..,,,!!!
இறையில்லத்தை மீட்போம்..!!!
இன்ஷா அல்லாஹ்...!!!


-
அஷ்ரப்

2 December 2014

விமானம் பறப்பது எப்படி?


அறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான். பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.
சரிஎப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறதுஇந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
how-airplane-landing
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A
ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B
முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C
கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D
பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில், நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடைலிப்ட்விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின்லிப்ட்விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும் சரிபலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில்டிராக் விசையை கொடுப்பதுகாற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(
பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிருக்கும் விசிறியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும். உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சின்தான் , சற்று மறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கைஇல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால் தான் தெரியும் இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்கு தான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்).
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்.
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது). இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது.
ஓடுதளம்..
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும் போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது...

-அஷ்ரப்