30 April 2013

வால்பாறை – வாழ்க்கையில் ஒரு முறையாவது போய் வர வேண்டிய சுற்றுலாத் தலம்


வால்பாறை :: கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.வால்பாறையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள்.
அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து, நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று.
தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ஓடும் ஒரு நதி, பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் இடம்பெற்ற இடம்.
இங்குள்ள தோட்டங்களுக்கு இடையே ஒரு பெருமாள் கோயிலும் உண்டு. மலையின் உச்சியில் அழகாகக் கட்டப்பட்டுள்ள அக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் இரண்டு மூன்று மணி நேரம் அமைதியாகக் கழிக்கலாம். இப்பகுதிகளில் நாம் நகரங்களில் காணும் அணில் செந்நிறத்தில் இருப்பதை காணலாம்.
அந்த அணில்களின் படங்கள் கூட அரியதாக இருக்கிறது. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மான் குட்டிகள் துள்ளி ஒடும் காட்சியும் அருமையானது. வால்பாறை அழகை ரசித்துவிட்டு பொள்ளாச்சியை நோக்கி இறங்கும் மலைப்பாதை 30க்கும் அதிகமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. ஒரு இருபது வளைவுகளைக் கடந்த பின்னர் கீழேயுள்ள ஆழியாறு அணையின் எழிலைக் காணலாம். அற்புதமான காட்சி அது.
ஆழியாறை நெருங்குவதற்கு முன்பு வண்டியை நிறுத்துங்கள். அங்கு ஓர் அருவி உள்ளது. குரங்கருவி, மிகச் சிறிய அருவிதான் என்றாலும், அருவிக்கு சற்று முன்னால் குளம் போல நீர் தேங்கி இருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு சுகமாகக் குளிக்கலாம்.
காலை நேரத்தில் குரங்கருவிக்கு நீராடச் செல்பவர்களுக்கு குறைந்த விலையில் வீட்டில் சுட்ட இட்லி, தோசை, வடை கிடைக்கும். மிக ருசியாக இருக்கும்.
புறப்படுங்கள் அங்கிருந்து….
தமிழக கேரள எல்லையில் உள்ள டாப் ஸ்லிப்பை நோக்கி. இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம். தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது.
இவ்விடத்தின் உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை. மறைத்துக் கொண்டு போய் சிக்கனால் சிறைதான்.
டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம். அங்குள்ள தமிழ்நாடு வனத்துறையின் விருந்தினர் மாளிகைகளில் தங்கும் வாய்ப்பு கிடைத்தால் இரவில் உலவ வரும் கரடியில் இருந்து சிறுத்தை வரை எல்லாவற்றையும் பார்க்கலாம்.
டாப் ஸ்லிப்பில் இருந்து காட்டிற்குள் சென்று சுற்றிப்பார்க்க யானை சவாரி வசதி உள்ளது. இங்கிருந்து மேலும் சிறிது தூரம் சென்றால் கேரள எல்லை. கேரள எல்லைப் பகுதிக்குள் போகும் அந்த சாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனத்தில் சென்றால் தமிழகமும், கேரளமும் இணைந்து நிர்வகித்து வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் 3 அழகிய அணைக்கட்டுகளைப் பார்க்கலாம்.
ஒன்று பெருவாரிப்பள்ளம், மற்றொன்று தூணக்கடவு, எல்லாவற்றுக்கும் மேல் இறுதியாக அந்த சாலையின் முடிவாக மலையின் உச்சியில் பரம்பிக்குளம் தண்ணீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணை. 2700 அடி உயரத்தில் இந்த அணை உள்ளது.
இப்பகுதி மிக அருமையான பொழுதுபோக்கிடமாகும். மலையும், நீரும், பறவைகளின் ஒலியும், காற்றும் சுகமான அனுபவங்கள்.
வேட்டைக்காரன் புதூரில் இருந்து பரம்பிக் குளம் அணை வரை செல்லும் பாதையில் ஆங்காங்கு நிறுத்தி அடர்ந்த வனப்பகுதியை ரசித்துப் பார்க்கலாம்.
இரண்டு நாட்கள் போதும். ஒரு நாள் வால்பாறை, மறுநாள் டாப் ஸ்லிப். மனதுக்கு இதம் தரும் இனிய சுற்றுலாவாக இருக்கும்.
எப்படி போவது?
By Air:
Coimbatore is the nearest Airport from Valparai.
Route To Valparai From Coimbatore –> Pollachi –> Valparai
By Train:
Pollachi & coimbatore is the nearest railway station from Valparai.
By Car / Bus:
Valparai can be reached by cars & buses From Pollachi,Coimbatore,Palakkad.
Pollachi to Valparai – 65 km by road
Coimbatore to Valparai : 105 km – Travel time: 3 hrs.
எங்கே தங்குவது?
Hotel Green Hill Pvt Ltd
state bank road,
Valparai
Tel: +91 4253–222262,222562
Hotel Treat
Valparai
Tel: +91 4253–222381
Mobile: 9443322981
The Stanmore bungalow
Valparai
Tel: +91-94422 02001
கிளம்பும் முன்பு இதையெல்லாம் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்!
1) You would be better off if you private taxi service in Valparai for the places you are planning to visit rather than depending upon public transportation.
2) Carry about a raincoat or an umbrella as sudden burst of showers are quite frequent here. We get rains for almost 6 months every year.
3) Carry a first aid kit if you are planning on exploring the area here on foot. Have salt powder if you prefer rainy season. Because Commonly called “Attai” (a parasitic worm) silently start sucking blood from your legs. But you need not worry because they are anesthetics as well. So you will not have any pain at all. Salt powder when applied will liberate you from these parasites.
4) When you are in certain isolated patches of land filled with enriching beauty here you will be definitely mesmerized and would not want to leave but guess who else will be sharing the same feelings? Elephants, Bisons and monkeys and they won’t be civil to humans fooling about their territory. So be careful. Deers are very common sight. Rare visitors are panthers and pythons.
************************************************
Valparai is a small town located at 3500 feet above sea level in the Anamalai ranges of Coimbatore district in the state of Tamilnadu in India.Valparai’s history ranges back to the 19th century when the Karnatic coffee company bought some land from the Madras Government for Coffee Cultivation in the Anamalais. But the expected yield of coffee was not obtained and so growth stagnated in the area. But things started to turn around in the first half of the 20th century when tea estates and rubber plantations started to develop around the area.The Valparai Township was started in 1903 by the Anamalai Planters Association.You might have heard of the phrase ‘Inclusive distribution of wealth within the society’. When this phrase is applied to Valparai it would imply inclusive distribution of beauty within the environment’. In simple words, you cannot compare one area of scenic beauty with another as every area here would leave you with an equal and completely overwhelming sense and feeling of awe. But afterall this is paradise so you cannot expect more.Another thing is that humans and non-humans live in perfect harmony in Valparai. You could easily spot a deer or a pack of deers or monkeys or peacocks by the side of the road. The elephants are the local badboys moving about in packs and rampaging fields. They are usually great to look at with their majesty and all but make sure you have a lot of space inbetween and stay clear of a lone elephant because they are known to have mood swings and the swings are usually towards the rough side.
நன்றி
ஆந்தை ரிப்போர்ட்டர்

மாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்?


மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சில சலுகைகளை வழங்கினாலும், அதை அவர்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியாதபடி பல முட்டுக்கட்டைகள் உள்ளன. அதில் முக்கியமானது, மோட்டார் சைக்கிள் வாங்குவது. மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களுக்கு சாலை வரி கிடையாது. ஆனால், அந்த வாகனம் 'அராய்’ (Automotive Research Association of India)நிறுவனத்தால் சான்றிதழ் பெற்ற பணிம¬னையில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சலுகையைப் பெற முடியும். 
தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளால் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான வாகனங்கள், உள்ளூர் வொர்க் ஷாப்பில் மாற்றி அமைக்கப்பட்டவை. அதனால், இந்த வாகனங்களுக்கு வரிச்சலுகை கிடைக்காமல் போவதுடன், ஓட்டுனர் உரிமமும் தருவது இல்லை. அதனால், அந்த வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதிலும் பல சிக்கல்கள்.

இதற்கு முக்கியக் காரணம், அராய் சான்றிதழ் பெற்ற பணிமனைகள் தமிழகத்தில் மிகச் சில மட்டுமே இருப்பதுதான். அவையும் சில நடைமுறைச் சிக்கல்களினால், சரிவர மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வாகனங்களை உருவாக்கித் தருவதில்லை. இந்தப் பிரச்னைக்குத் தற்போது ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது.ஆம், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சென்னை டீலரான ராம்கே டிவிஎஸ் நிறுவனம், அராய் சான்றிதழ் பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனம் வாங்க என்னென்ன நடைமுறைகள் உள்ளன. அவர்கள் சலுகையைப் பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று, ராம்கே டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் ஜீ.கே.தினகரிடம் கேட்டோம்.

'
முதலில், மாற்றுத் திறனாளிகள் வரிச்சலுகையுடன் வாகனம் வாங்க என்னென்ன சான்றிதழ்கள் வேண்டும் என்பதைச் சொல்கிறேன். மாநில அரசால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை முக்கியம். இது இல்லை என்றால், மாற்றுத் திறனாளிகள் வாரியத்தில் விண்ணப்பித்துப் பெற வேண்டும். இரண்டாவது, அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் (Disability Certificate) சான்றிதழ். இதில் அவர் எத்தனை சதவிகிதம் மாற்றுத் திறனாளி என்பதும் கட்டாயம் பதிவு செய்து இருக்க வேண்டும்.

பொதுவாக, 40 சதவிகிதத்துக்குக் கீழ் இருப்பவர்கள் மாற்றுத் திறனாளிகளின் பிரிவில் வர மாட்டார்கள். அவர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க எந்தச் சலுகையும் கிடைக்காது. மூன்றாவதாக, அதே மருத்துவரால் அவர் இரு சக்கர வாகனம் ஓட்டத் தகுதியானவரா? அவரால் ஒரு வாகனத்தை இயக்க முடியுமா? என்பதையும் சான்றிதழாகப் (Certificate For Ability Driving Motor Vehicle) பெற்று வர வேண்டும். நான்காவதாக, அரசு அவருக்கு ரயில், பஸ் போன்றவற்றில் பயணிக்க சலுகைச் சான்றிதழ் (Concession Certificate) வழங்கி இருந்தால், அதையும் சமர்ப்பிக்கலாம். ஆனால், இது கட்டாயம் இல்லை.

அனைத்துச் சான்றிதழ்களும் தரப்பட்ட பின்புதான் அடுத்தகட்ட வேலை ஆரம்பமாகும். இந்தச் சான்றிதழ்களை எல்லாம் எங்களிடம் சமர்ப்பித்த பின்பு, ஒரு மாதத்துக்குள் அவர்களுக்கான வாகனத்தைத் தயாரித்து வழங்குவோம். அவர்களின் தேவைக்கு ஏற்ப சின்னச் சின்ன மாற்றங்கள் வேண்டும் என்றாலும், அதையும் செய்து கொடுப்போம். வாகனத்தை, குறிப்பிட்ட மாற்றுத் திறனாளியின் பெயரில் மட்டுமே பதிவு செய்து தருவோம். இன்ஷூரன்ஸும் அவரது பெயரில்தான் இருக்கும். இதன் பின்பு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று, ஆய்வாளரிடம் ஓட்டிக் காட்டிய பிறகுதான் ஓட்டுனர் உரிமம் பெற முடியும்'' என்றார் தினகர்.


Ramkay TVS

No 1, Near Fly Over, 1st Cross Street Kasturibai Nagar, Adyar, Chennai - 600020 | 
(044) 66420709
(044) 24403804
Send Enquiry by Email
www.ramkaytvs.com

நன்றி 
கோவை ராஜா





அஷ்ரஃப் 


நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று?

நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று?


மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.

பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால் கைது என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போதும் தாமதப்படுத்தும்போதும் எப்படி உணர்வீர்கள்?சுதந்திரமாக?

போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும் இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை.அப்படின்னாகாஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்பு கொள்வீர்களா?

உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம் முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா?அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோமா?இல்லை கொல்வோமா?

கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே? வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும் அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே?

உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாக நீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும் பட்சம் தாக்கப்படுவீர்கள்.

சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்பினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலைஇல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.

கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.ஆயுதங்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.அடி உதைக்கு பயந்து அவர் சும்மானாச்சும் ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்தி மல்லாக்க படுக்க வைத்தோம். ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற ஊற்றப்பட்டது.வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றை கேட்குமா? தேசிய கீதம் பாடுமா?

எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம்.

சதிஸ் செல்லதுரை 
எல்லை படை அதிகாரி-

அஷ்ரஃப் 

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?????


பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். 

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். 

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம். 

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது. 

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. 


இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?????

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!




அஷ்ரஃப் 



ஒரு முஸ்லிமின் பண்புகள்

1. ஒரு முஸ்லிம் தனது வாழ்வை முழுமையாக இறைவனுக்காக அர்ப்பணித்து, தனது அனைத்து காரியங்களையும் இறை பொருத்தத்தை நாடியே செயலாற்ற வேண்டும். 

2.
அவன் தன்னைப் படைத்த இறைவனையன்றி வேறு யாரையும் வணங்கக் கூடாது. தன் பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும். மேலும் உறவுகளைப் பேணி நடப்பதோடு பக்கத்து வீட்டார் மற்றும் விருந்தாளிகளுக்கு உரிய மதிப்பை வழங்கி வாழும் அதே வேலை பிறருக்கும் முடிந்தளவு உபகாரம் புரிய வேண்டும். 

3.
ஒரு முஸ்லிம் இறைவன் தடை செய்துள்ள கொலை, களவு, விபச்சாரம், இலஞ்சம், சூது, வட்டி, மது அருந்துதல், போதை வஸ்து பாவித்தல், ஊழல், மோசடி, போன்ற கொடிய பாவங்களில் ஒரு போதும் ஈடுபட கூடாது. 

4.
ஒருமுஸ்லிம் எப்போதும் பொய் பேசாது உண்மையே பேச வேண்டும்.

5.
ஒரு முஸ்லிம் வாக்களித்தால் மாறு செய்யக்கூடாது. அவன் நம்பிக்கை நாணயத்துடன் நடக்க வேண்டும்.

6.
ஒரு முஸ்லிம் மற்றவர்களைப் பற்றி புறம் பேசவோ, மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவி ஆராயவோ, பிறரை மானப்பங்கப் படுத்தவோ கூடாது.

7.
ஒரு முஸ்லிம் தைரியமுள்ளவனாக இருக்க வேண்டும், கோழையாக இருக்கக் கூடாது.

8.
ஒரு முஸ்லிம் உண்மையை ஆதரிக்கும் விடயத்தில் நிலையானவனாகவும், உண்மையை எடுத்துக் கூறுவதில் தைரியமுள்ளவனாகவும் இருப்பான்.

9.
அடுத்தவர் தன்னை எதிர்த்த போதும் ஒரு முஸ்லிம் நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் உரிமையை சட்ட விரோதமாக மீறவும் கூடாது. அடுத்தவர் மூலம் அநீதம் செய்யப் படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவன் வலிமை உள்ளவனாகவும் தன்மானத்தை எவரிடமும் இழக்காதவனாகவும் இருக்க வேண்டும்.

10.
ஒரு முஸ்லிம் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் விரும்ப வேண்டும். வதந்திகளைப் பரப்பி விடுபவனாகவோ, வன்முறைகள், குழப்பங்களைத் தூண்டுபவனாகவோ இருக்கக் கூடாது. 

11.
ஒரு முஸ்லிம் தன் செயற்பாடுகளை இயன்றவரை நேர்த்தியாக செய்ய வேண்டும்.

12.
ஒரு முஸ்லிம் கர்வமற்றவனாகவும், நற்குணமுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

13.
ஒரு முஸ்லிம் சிறியோருக்கு இறக்கம் காட்டுபவனாகவும், முதியோருக்கு மதிப்பளித்து நடப்பதோடு இறைவனின் அனைத்துப் படைப்பினங்களோடும் ஜீவகாருண்யம் பேணி நடந்து கொள்வதும் அவசியமாகும். 

14.
அவன் நன்மை புரிவதோடு அடுத்தவரையும் நன்மை புரியத்தூண்ட வேண்டும். அவன் தீமை புரிவதை தவிர்த்துக் கொள்வதோடு அடுத்தவரை யும் அதிலிருந்து தடுக்க வேண்டும்.

15.
ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மார்க்கம் நிலைத்திருக்கவும், உலகம் முழுவதும் பரவுவதற்கு முயற்சிக்கவும் போராடவும் வேண்டும். இஸ்லாத்தின் வரையறையை மீறாதவனாக அனைத்து காரியங்களையும் மேற்கொள்வான், இஸ்லாத்தின் வெற்றிக்கென சட்ட விரோத செயல்கள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது.

29 April 2013

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா..?


கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா..?


அடிக்காமல் கண்களில் இருந்து கண்ணீர் வருமா? நிச்சயம் வரும். அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம், வெங்காயம் அழ வைக்காதா என்ன? வெங்காயமானது எத்தகைய கல் நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் திறன் உடையது. எப்படி மாமியார் மருமகளை எளிதில் அழ வைப்பார்களோ, அதுப் போன்று வெங்காயம் அனைவருக்கும் ஒரு மாமியார். சரி, இவ்வாறு வெங்காயம் நறுக்கினால் எதற்கு கண்ணீர் வருகிறது என்று யாராவது யோசித்ததுண்டா? இல்லை, அல்லவா.

வெங்காயம் நறுக்கினால் கண்களில் இருந்து வெளிவருவதற்கு, வெங்காயத்தில் கண்களுக்கு எரிச்சலைத் தரும் நொதிப்பொருள் ஒன்று உள்ளது. அந்த நொதிப் பொருள், காற்றில் கலந்து, கண்களை சேர்வதால் தான், கண்களில் இருந்து தண்ணீர் வருகிறது. எனவே இத்தகைய பிரச்சனைக்கு தீர்வே இல்லையா என்று கேட்கலாம். இதற்கு நிச்சயம் தீர்வு உள்ளது. இந்த உலகில் பிரச்சனை என்று ஒன்று இருந்தால், அதற்கு நிச்சயம் தீர்வு என்ற ஒன்றும் இருக்கும். அதுப் போலத் தான், வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வராமல் இருப்பதற்கும், ஒருசில வழிகள் உள்ளன. அத்தகைய வழிகளை பின்பற்றி வந்தால், வெங்காயம் நறுக்கும் போதும் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம். சரி, அத்தகைய வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

கூர்மையான கத்தி வெங்காயத்தை நறுக்கும் போது கூர்மையான கத்தியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் வெங்காயத்திலிருந்து வெளிவரும் நொதியின் அளவு குறைந்து, கண்ணீர் வராமல் இருக்கும்.

வெங்காயம் நறுக்கும் போது தண்ணீரில் வைத்துக் கொண்டு வெட்டலாம் அல்லது தண்ணீரில் ஊற வைத்து, பின் அதனை எடுத்தும் வெட்டலாம். இதனாலும் கண்ணீர் வராமல் இருக்கும்.

வெங்காயம் வெட்டுவதற்கு 10-15 நிமிடம் ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். ஆகவே வெங்காயம் வெளியேற்றும் திரவம் போன்ற நொதியானது காற்றில் கலக்காமல் இருக்கும். இதனால் கண்களில் தண்ணீர் வராமல் இருக்கும்.

வெங்காயம் வெட்டும் போது, ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து நறுக்கினால், அதிலிருந்து வெளிவரும் நொதியானது காற்றில் கலந்து கண்களை அடையாமல், ஃபேன் சுற்றுவதால் வெளியே தள்ளப்பட்டுவிடும்.

வெங்காயத்தை தண்ணீரை திருப்பி விட்டு, அதில் வைத்து வெட்டினாலும் கண்ணீர் வராது.

வெங்காயத்தை வைத்து நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தேய்த்து வெட்டினால், வினிகர் வெங்காயத்தில் இருந்து வெளிவரும் நொதிகளை அழித்துவிடும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து, வெங்காயத்தைப் போட்டு ஊற வைத்து, நறுக்கினாலும் அழுவதைத் தடுக்கலாம்

வெங்காயம் வெட்டும் போது அருகில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வெங்காயம் நறுக்கினால், வெங்கயாத்திலிருந்து வெளிவரும் நொதியானது காற்றில் கலந்து, கண்களை கலங்க வைப்பதற்கு முன், மெழுகுவர்த்தியில் இருந்து வெளிவரும் வெப்பக்காற்றானது தடுத்துவிடும்.

நிறைய மக்கள் சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டு, வெங்காயத்தை நறுக்கினால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம் என்று சொல்கின்றனர்.

27 April 2013

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்


முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் 
அரேபியாவில் உள்ள மக்காவில் கி.பி. 571 ல் ஆமினா, அப்துல்லாஹ் அவர்களுக்கும் மகனாய் பிறந்து, பெற்றோரை இழந்து பாட்டனார் அப்துல் முத்தலிபு ஆதரவில் வளர்ந்து தீய செயல்கள் அனைத்திலிருந்தும் சிறு வயதிலேயே விலகியும் அல்அமீன் என்ற சிறப்பு பெயர் பெற்றவர்தான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள். 

அவர் நாற்பது வயதை அடைந்ததும் மக்காவிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜபலுன்நூர் என்ற இந்த மலையின் உச்சியிலுள்ள ஹிரா குகைக்கு சென்று தனிமையில் இருப்பது வழக்கம். சிலை வணக்கம், விபச்சாரம், மது அருந்துதல், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், கோத்திரங்களுக்கிடையே இருந்த பகைமை போன்ற தமது மக்களின் தீயச் செயல்கள் நிறைந்த வாழ்க்கை முறைகள் அவரை பெரிதும் கவலைப்படச்செய்தன. ஹிரா குகையில் பல நாட்கள் தொடர்ந்து தியானம் செய்வது அவரது வழக்கம். ஒரு நாள் அவர் ஹிரா குகையில் இருந்த போது அல்லாஹ்வின் கட்டளைப்படி வானத்திலிருந்து இந்த மலைக்கு இறங்கி வந்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்ற வானவர் அவரிடம் ஓதுவீராக என்றார். அதனைக்கேட்டு பயந்து நடுங்கி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் எனக்கு ஓத தெரியாது என்று கூறினார். வானவர் அவரை இறுக அணைத்து மீண்டும் ஓதுவீராக என்றார். அதற்க்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் நான் அறியேன் என்றார். மூன்றாவது முறையும் இவ்வாறே நடந்தது. பிறகு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை வானவர் ஓதிக் காட்டினார்.
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 
அலக்என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். 

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். 

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். அல்குர்அன் 96:1-5 

இதற்க்கு பின் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்றுவிட்டார். இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-
வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

அஷ்ரஃப்