24 May 2014

எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன்... டயாலிசிஸ்... வெறும் 600 ரூபாயில் கம்மி ரேட்டில் காஸ்ட்லி செக் அப்

தலைவலி காய்ச்சல் என்றாலே அனைத்து டெஸ்டையும் எடுக்கச்சொல்லி பர்சை பதம்பாக்கும் மருத்துவ உலகிற்கு மத்தியில் டயாலிசிஸ்க்கு வெறும் ரூ 600 வாங்கும் மருத்துவமனை சென்னை மாநகரின் மத்தியில் இருப்பது அதிசயத்திலும் அதிசயம். சேவை மனப்பான்மையுடன் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து செயல்படுகிறது ஒரு மருத்துவமனை.

லயன்ஸ் ஓம் பரிசோதனை மைய ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

பன்னாட்டு அரிமா சங்கம் மாவட்டம் 324 ஏ,5, என்ற அமைப்பின் மூலம் கண் சிகிச்சை, ரத்ததான முகாம் உள்பட பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளோம். ரத்த வங்கியும் வைத்துள்ளோம். தற்போது புதிதாக அரிமா சங்கத்தில் டயாலிசிஸிஸ் சிகிச்சை நடத்திவருகிறோம். மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவத்துறையில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக அரசு பொதுமருத்துவமனைகளை ஆய்வு செய்தோம். பலர் சிறுநீரகப் பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தோம்.

இதையடுத்து டயாலிசிஸ் திட்டத்தை ஆரம்பித்தோம். 20, 25 வயதுள்ள இளைஞர்கள் கூட சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வேலை நெருக்கடி, மன அழுத்தம் தரமற்ற தண்ணீர் போன்ற நம்முடைய உணவுமுறை தான் முக்கிய காரணம், சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதாக நினைத்து சத்தான உணவுகள் சாப்பிடுவதை நிறுத்துவிடுகின்றனர், இதற்கு‘ ‘நவீன வாழ்க்கைமுறை‘‘‘‘ என்று பெயர் வைத்துள்ளோம்.

சிறுநீரக மாற்றம் செய்யும்போது, தசை நார்கள் இணைப்பு ஒத்துப்போக வேண்டும், சிலர் இதை வியாபாரமாக்கியதால் அரசும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. மேலும் சில மருத்துவமனைகளில் எச்.ஐ.வி., ஹெபடைட்டிஸால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்கமாட்டார்கள், ஆனால் நாங்கள் அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பார்த்துக்கொள்கிறோம். மருந்து, மாத்திரைகளை அதன் விலைக்கே தருகிறோம்‘. அது தான் மருந்து மாத்திரை செலவு மிகவும் குறையக்காரணம் இது டயாப்பட்டீஸ், ஈ.சி.ஜி. போன்றவர்களுக்கும் பொருந்தும்.

எங்களிடம் தினமும் 20 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவர்களிடம் இருந்து பெறப்படும் தொகையை சிகிச்சை பெற முடியாத ஏழைகளின் சிகிச்சைக்கு பயன்படுத்துகிறோம். கார்ப்ரேட் நிறுவனங்கள் 2 சதவிகிதத்தை சமூக சேவைக்கு செலவிடவேண்டும் என்று சட்டம் உள்ளது. அவர்கள் எங்களுக்கு உதவினால் மேலும் எங்களின் சிகிச்சை மையங்கள் விரிவடையும். மயிலாப்பூர், திருவான்மியூர், குரோம்பேட்டை, கொளத்தூர், போன்ற பகுதிகளிலும் எங்கள் மையங்கள் செயல்படுகிறது. எங்களிடம் டயாலசிஸ் கட்டணம் ரூ.600 முழு உடல் பரிசோதனைக் கட்டணம் ரூ.599 மட்டுமே. மேலும் அல்ட்ரா ஸவுண்ட் ஸ்கேன், கலர் டாப்ளர்/ எக்கோ, ரத்த சர்க்கரைப் பரிசோதனை, தைராய்டு உள்ளிட்ட சிகிச்சைகளையும் செய்கிறோம். என்றார்.
-
அஷ்ரப்

பெண்ணே உங்கள் வருங்கால கணவர்



பெண்ணே உங்கள் வருங்கால கணவர்
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),
11.கெட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,
இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?
மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.
காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.
இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.
https://www.facebook.com/Puradsifm
www.puradsifm.com
www.isaiyaruvi.com
www.puradsifm.com/news



-அஷ்ரப்

23 May 2014

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாத்துஹூ...


ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

அல்குர்ஆன் 2:183
நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரத்தில் கூறுகிறார்கள்.
ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமை மிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி)
நூல் : பைஹகி
எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்.
அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி (ரழி)
நூல் : பைஹகி
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புஹாரீ (1904)
சிறப்பும், கண்ணியமும் மிக்க வரும் ரமழான் மாதத்தை அடைந்து நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நல் அமல்கள் செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமின்.
-அஷ்ரப்

17 May 2014

நீங்கள் தான்... நாளைய வி.ஏ.ஓ. இதோ சில டிப்ஸ்...

மத்திய மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள் அறிவிக்கும் 3,000 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர். இத்தகைய போட்டிகள் மிகுந்துள்ள இச்சூழ்நிலையில் வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களது தகுதியையும், திறமையையும் வளர்த்துக் கொள்வது எப்படி? போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணியை அடைவது எப்படி? விரைவில் நடைபெறவுள்ள வி.ஏ.ஓ மற்றும் குரூப் 2 தேர்வுகளில் உறுதியான வெற்றியை எளிமையாக அடைவது எப்படி? என்பது குறித்த பல்வேறு பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்... சென்னை, குரோம்பேட்டையில் இயங்கிவரும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமியின் இயக்குனர் ச.வீரபாபு.... தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் பொதுத்தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழ்ப்பாடத்தைப் பொறுத்தமட்டில் சமச்சீர் பாடப்புத்தகங்கள், பொதுத்தமிழ் மற்றும் சிறப்புத்தமிழ் போன்ற புத்தகங்களை முழுமையாகவும், தெளிவாகவும் செறிவாகவும் தனிக்கவனம் செலுத்தியும் படித்தால் பொதுத்தமிழ் பகுதியில் 100க்கு 100 மதிப்பெண்களை பெற முடியும். தமிழ் தானே... அதை கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் எனக்கருதி தமிழை தள்ளிப்போட்டு, அதனால் உங்கள் வெற்றியையும் தள்ளிப் போட்டு, தடுமாறி தடம் மாறாமல் பொதுத்தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனே படிக்கத் துவங்குங்கள். தேர்விலே வெற்றிபெற கடினமாகப் படித்தால் மட்டும் போதாது. வினா வங்கியை வைத்து பயிற்சி செய்யவேண்டும். படிப்பது மற்றும் படித்ததை பயிற்சி செய்து பார்ப்பதைவிட மிக முக்கியமானது மாணவர்களின் மனநிலையே. குறிப்பாக தேர்வு அறையில் அவசரப்படாமலும் பதற்றமடையாமலும் இருப்பது நல்லது. மாறாக, பதற்றமடைவதால் தெரிந்த வினாக்களுக்கே தவறான விடையளிக்க வேண்டிய சூழலும் கொள்குறி வகை விடையை சரியாக கருமையாக்க முடியாத நிலையும் ஏற்படலாம். அவ்வாறு அரசுத்தேர்வை அவசர கோலத்தில் அணுகாமல் மனதை மகிழ்சியாகவும் அமைதியாகவும் வைத்திருந்தால் தெரியாத வினாக்களுக்குக்கூட நான்கு விடைகளில் தவறான மூன்று விடைகளை கண்டுபிடித்து அதை நீக்குவதன் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கலாம். 14.06.2014 அன்று வி.ஏ.ஓ. தேர்வெழுதும் மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டும் வகையில் 2 மாதிரி வினாத்தாள்களை இலவசமாக வழங்க உள்ளோம். இந்த வினாத்தாள்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள புதிய பாடத்திட்டத்தின்படியும், சமச்சீர் கல்வி மற்றும் கிராம நிர்வாகம், புத்திக்கூர்மைத்திறன், பொது அறிவு, பொதுத்தமிழ் போன்ற பாடங்களுக்கு முக்கியக் கவனம் செலுத்தியும் எதிர்நோக்கும் வினாக்களை உள்ளடக்கியும் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் அரசுத்தேர்வு நடைமுறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள “வி.ஏ.ஓ. மாதிரி வினாத்தாள்களை” பெற விரும்புவோர் 9710375604 / 9941937976 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமியின் அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். ஆகவே நன்கு திட்டமிட்டு நம்பிக்கையோடு படியுங்கள்... நீங்கள்தான் நாளைய வி.ஏ.ஓ! இவ்வாறு தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ச.வீரபாபு தற்போது, “பொதுத்தமிழ் வெற்றிக்களஞ்சியம்” எனும் தலைப்பில் எல்லாத்தேர்வுகளையும் வெல்ல வைக்கும் ஒற்றைப் புத்தகமாக பொதுத்தமிழ் பாடத்திற்கான முழுமையான தொகுப்பு ஒன்றைத் தயாரித்துள்ளார். 30 நாளில் பயிற்சிஎங்கள் அகடமி சார்பில் மாறுபட்ட ஒரு முயற்சியாக 30 நாட்களிலேயே விஏஓ தேர்வுக்கான பயிற்சி அளிக்கக்கூடிய வகுப்பை மே 10ம் தேதி முதல் தொடங்கி உள்ளோம். தேர்வுக்காக இப்போது படிக்க தொடங்கியவர்கள் கூட இதில் சேர்ந்தால் முழுமையாக கற்று தேர்வுக்கு தயாராகலாம். பயிற்சியில் தினமும் தேர்வுகளும் நடத்தப்படும் என்று கூறினார் வீரபாபு.

-
அஷ்ரப்

16 May 2014

குடும்ப உறவில் மலரும் இஸ்லாம்:



குடும்ப உறவில் மலரும் இஸ்லாம்:

குடும்ப உறவு என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனிதமிக்க உறவாகும். அதில் சில சந்தர்ப்பங்களில் சலசலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அதன் மூலம் இறைவன் உறவின் வலிமையை மேலும் பலப்படுத்தி விடுகின்றான். ஆனால் நம்மில் சிலர் குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்தி பல்லாண்டுகள் நீடித்து அப்புனித உறவை ஒரே நாளில் சிதைத்து விடுகின்றார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

ஒரு ஆண் தனது ஆண்மையை இழந்து விட்டாலும் பெண் அவனுடன் சகிப்புத்தன்மையோடும், பொறுமையோடும் வாழ முடிவு செய்கிறாள். அதேசமயம் யார் மீது குறை என்பது நிரூபிக்கப்படாத நிலையில் இருந்தால் பெண்ணின் மீதே பழி சுமத்தி ஆண்கள் தம்மை குறையற்றவர்களாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரிடத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆராயும் போது அவர்கள் சமுதாய அரங்கில் மிகப் பெரிய அந்தஸ்துள்ளவர்களாக இருந்த போதும் வீட்டுக்கு வந்து விட்டால் மிகச் சிறந்த கணவராக மாறி விடுவார்கள். சமையல் உட்பட அனைத்திலும் மனைவியர்களுக்கு உதவி புரிவார்கள்.

ஆண்களைப் பார்த்து அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகிறான் :
அப் பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையோடிருப்பீர்களாக. ஏனெனில்) ஒரு பொருளை நீங்கள் வெறுக்கக் கூடும். (ஆனால்) அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருப்பான் (அல்குர்ஆன் 4:19)

பெண் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : பெண்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருங்கள். ஏனெனில் அவர்கள் விலா எலும்பினால் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரேசமயத்தில் அதை நேராக்க முயன்றால் உடைந்து விடும். அப்படியே விட்டு விட்டால் வளைந்த வடிவத்திலேயே இருக்கும். (நூல்: புகாரீ)

தன்னுடைய மனைவியிடத்தில் காணப்படும் வெறுப்புக்குரிய விஷயத்தை எவ்விதம் கையாள்வது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது,

ஒரு முஃமின் தன்னுடைய மனைவியிடத்தில் ஏதேனும் ஒரு குணம் பிடிக்கவில்லையென்றால் அவள் மீது கோபப்பட மாட்டான். மாறாக மற்றொரு புறத்தைக் கொண்டு திருப்தியடைந்து கொள்வான். (நூல்: முஸ்லிம்)

ஒரு ஆணுக்கு தன் மனைவியின் மீது குற்றம் கூற உரிமை இருப்பது போலவே பெண்ணுக்கும் இருக்கிறது. நபித்தோழியர்களான பெண்கள் அச்செயலையும் இஸ்லாமிய அடிப்படையில் எப்படி அணுகி இருக்கின்றார்கள் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் போது ஒரு பெண்மணி வருகை தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தன் கணவரைப் பற்றி மூன்று புகார் கூறினார்.

யாரசூலுல்லாஹ் என் கணவர் ஸஃப்வான் நான் தொழுதால் அடிக்கிறார். நோன்பு வைத்தால் விட்டு விடச் சொல்கிறார். சூரியன் உதயமாகும் பஜ்ர் தொழுவதில்லை. இந்த புகாரைக் கூறும் போது ஸஃப்வானும் அந்த சபையில் இருந்தார். ‘என்ன ஸஃப்வானே! உன் மனைவி கூறுவது உண்மைதானா?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது அவர் ஆம் எனக் கூறிவிட்டு, அதற்குரிய காரணத்தைச் சொல்லத் தொடங்கினார்.

முதல் புகாருக்குரிய காரணம், அப்பெண்மணி இரவு நேரங்களில் தொழ ஆரம்பித்தால் முதல் இரண்டு ரக்அத்திலோ அல்லது முதல் ரக்அத்திலோ பெரிய இரண்டு சூhவை ஓதுகிறார். (தொழுது முடித்து விட்டு படுக்கைக்கு வருவதற்கு மிகத் தாமதமாகிறது என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு நேரங்களில் ஒரு அத்தியாயத்தையோ அல்லது இரண்டு சிறிய அத்தியாயங்களையோ ஓதுமாறு அப்பெண்மணிக்கு கட்டளையிட்டார்கள்.

இரண்டாவது புகாருக்கு அப்பெண்மணி தொடர்ந்து நோன்பு வைக்கிறார். நானோ வாலிபனாக இருக்கிறேன். எனக்கு பொறுமை இழந்து விடுகிறது என்று அவர் கூறிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கணவன் அனுமதியின்றி நஃபிலான நோன்புகளை மனைவி நோற்கக் கூடாது என்று கட்டளையிட்டார்கள்.

மூன்றாவது புகாருக்குரிய காரணமான ஸஃப்வான் பின்வருமாறு கூறினார். நான் பெரிய குடும்பத்துக்காரன் என்பதை நீங்களே அறிவீர்கள். இரவில் அதிகநேரம் விவசாயத்திற்கு நீர் பாய்ச்சுவதால் அதிகாலை எழுந்து நிற்க முடிவதில்லை என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃப்வானே! எப்பொழுது விழிக்கிறாயோ (உடன்) தொழுது கொள் என்றார்கள்.” (நூல்: இப்னுமாஜா) அதேசமயம் அதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது என்று வேறு பல நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

மனைவிக்குரிய கடமைகள் :

ஹக்கீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தந்தையின் வாயிலாக அறிவிக்கிறார்கள். ”யாரசூலுல்லாஹ்! எங்களது மனைவியர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன?” என்று கேட்டேன். (அப்போது) ஐந்து விஷயத்தைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

1) நீ சாப்பிடுவதை அவளுக்கும் சாப்பிடக் கொடு.

2) நீ உடுத்துவதைப் போன்று அவளுக்கும் உடுத்தக் கொடு.

3) அவள் முகத்தில் அடிக்காதே.

4) அருவெறுப்பான் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதே.

5) வீட்டிலேயே தவிர வேறெங்கும் அவளைத் தனிமைப்படுத்தாதே. (நூல்: இப்னுமாஜா)

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்களில் யாரும் தன் மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று (கசையால்) அடித்து விட வேண்டாம். ஏனெனில் பகலின் இறுதியில் அவளோடு அவர் சேர்ந்து விடுவார். (நூல்: புகாரீ)

அவ்வாறே தன் மனைவியின் தேவையையும், ஆசையையும், அவளது கண்களைப் பார்த்தே நிறைவேற்றுபவனே சிறந்த குடும்பத் தலைவனாக கருதப்படுகிறான்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது எனக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் ஓட்டப் பந்தயம் நடந்தது. அதில் நான் வெற்றி பெற்று விட்டேன். (சில காலம் கழிந்து) நான் சதைப் பிடிப்பாக இருந்த போது மறுபடியும் போட்டி நடந்தது. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெற்றி பெற்றார்கள். போட்டிக்குப் பின்பு இந்த வெற்றி முந்தைய வெற்றிக்குச் சமமாகி விட்டது என்றார்கள். (நூல்: அபூதாவூது)

மேலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள் : நான் என் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அனைவரும் ஓடி விட்டார்கள். அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து வந்து என்னுடன் விளையாடச் சொன்னார்கள். (நூல்: புகாரீ)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விளையாட்டின் மீது கொண்டிருந்த ஆர்வமிகுதியால் பள்ளி வளாகத்தில் அபஸ்ஸாவின் வீரர்கள் செய்த போர்ப் பயிற்சியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அனுமதியோடு ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். (நூல்: புகாரீ)

ஹுனைன் அல்லது தபூக் போருக்குப் போய் வரும் போது ஓரிடத்தில் தங்க நேரிட்டது. அச்சமயம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறக்கை முளைத்த குதிரை வைத்து விளையாடினார்கள். (அபூதாவூத்) இவ்விதமாக மனைவியர்களின் மனநிலைக்கும் வயதிற்கும் ஏற்ற சிறந்த கணவராக தம்மை உருவகித்தது போல வேறு எந்த உலகத் தலைவரும் வாழ்ந்ததாக வரலாறில்லை. அத்தகுதியால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் பின்வரும் பிரகடனத்தை அறிவிக்கின்றார்கள்.

உங்கள் குடும்பத்திற்கு யார் சிறந்தவரோ அவர் தான் உங்களில் சிறந்தவர். நான் என் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கிறேன். (நூல்: இப்னுமாஜா)

கணவன் மனைவி இருவருக்குமிடையில் மனம் விட்டுப் பேசாமல் இறுக்கமாக இருப்பதனால் தான் சிறிய பிரச்னைகள் பூதகரமாகி விடுகிறது.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடத்தில் கூறினார்கள் : நீ என் மீது கோபமாக இருக்கிறாயா? அல்லது சாந்தமாக இருக்கிறாயா? என்று எனக்குத் தெரியும். அப்போது நான், அதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? என்று நான் கேட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நீ என்மீது சாந்தமாக இருந்தால், முஹம்மதுடைய இறைவன் மீது சத்தியமாக என்று (பேச்சுவார்த்தையில்) கூறுவாய். என்மீது கோபமாக இருந்தால் இப்ராஹீமுடைய இறைவன் மீது சத்தியமாக என்று கூறுவாய். அப்போது நான் கூறினேன், ஆம் யாரசூலுல்லாஹ். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை பெயரைத் தவிர வெறொன்றையும் (கோபத்தின் போதும்) நான் துறக்கவில்லை. (நூல்: புகாரீ)

கணவனுக்குரிய கடமை :

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : பெண்களில் சிறந்தவர் யார்? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவளைப் பார்த்தால் கணவன் சந்தோஷமடைய வேண்டும். ஏதாவது வேலை செய்யச் சொன்னால் உடனே நிறைவேற்றுவாள். தன் உடலால் மோசடி செய்ய மாட்டாள். கணவன் வெறுக்கும் விதமாக பொருட்களை வீண் விரையம் செய்ய மாட்டாள். (நூல்: நஸஈ)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்சாரித் தோழர்களுடனும், முஹாஜிர்களுடனும் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு கோவேறுக் கழுதை வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸஜ்தா செய்தது. அப்போது தோழர்கள் கேட்டார்கள், யாரசூல்லாஹ், மிருகங்கள், மரங்கள் கூட உங்களுக்கு ஸஜ்தா செய்கிறது. அவற்றை விட நாங்கள் தானே உங்களுக்கு ஸஜ்தா செய்யத் தகுதி உடையவர்கள் என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்கள் தோழரான என்னைக் கண்ணியப்படுத்துங்கள். உலகில் மனிதருள் யாருக்காவது ஸஜ்தா செய்ய நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு ஏவியிருப்பேன் என்றார். (நூல்: அஹ்மது)

சிரம் தாழ்த்துவது என்பது தான் பணிவின் உச்சகட்ட செயலாகும். அதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவியை கணவனுக்கு செய்ய ஏவியிருப்பேன் என்று கூறியிருப்பதன் மூலம் அதிகபட்சமான பணிவு காட்டுமாறு மனைவியருக்கு கட்டளையிடுகிறார்கள். அதற்காக மனைவியர்களை அடிமைப்படுத்துவது என்பது அர்த்தமாகாது. மனைவியை கணவன் மதிப்பதும், கணவனுக்கு மனைவி பணிவதும் தான் குடும்ப உறவின் மகத்தான புனிதமாகும். அதற்கொப்ப நம் குடும்ப வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக..!

உங்க பகுதியில இருக்குற காஸ் ஏஜென்ஸி தொலைபேசி எண்கள்

உங்க பகுதியில இருக்குற காஸ் ஏஜென்ஸிகளை தொடர்பு கொள்ளணுமா. இதோ உங்களுக்காக உங்க ஏரியாவில் இருக்குற காஸ் ஏஜென்ஸிகளின் தொலைபேசி எண்கள்: * வரலட்சுமி கேஸ் ஏஜென்சீஸ் செனாய்நகர் 04426640821 * மாருதி இன்டேன் டிஸ்டிபியூட்டர்ஸ் அண்ணா நகர்(மேற்கு) 04426154243 * அஜிதா கேஸ் ஏஜென்சீஸ் வில்லிவாக்கம் 04426177544 7299819939 * ஸ்ரீ மா கிருபா கேஸ் ஏஜென்சீஸ் அண்ணாநகர்(மேற்கு) 04426563350 9884330910 * மாருதி இன்டேன் டிஸ்டிபியூட்டர்ஸ் அண்ணாநகர்(மேற்கு) 04426154243 * ஜீவன் இன்டேன் கேஸ் ஏஜென்சீஸ் வில்லிவாக்கம் 04426174381 * பார்க் டவுன் கோஆப் ஸ்டோர் அண்ணாநகர்(மேற்கு) 04423457178 எச்.பி. கேஸ் * அன்னை மீனாட்சி கேஸ் ஏஜென்சீஸ் அண்ணாநகர்(மேற்கு) 04426163754 * ஸ்ரீ கணேஷ் கேஸ் சர்வீஸ் கீழ்ப்பாக்கம் 04426433510 9841010995 * ஆசிர்வாதம் எச்.பி.கேஸ் சர்வீஸ் அரும்பாக்கம் 9790763652 * கணேஷ் கேஸ் சர்வீசஸ் அயனாவரம் 04426610321

-
அஷ்ரப்

கொந்தளிக்கும் பெற்றோர் பள்ளிகளில் கட்டண கொள்ளை!

தமிழகத்தில் மொத்தம் 10,934 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அரசு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த 2012ல் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழுவினர் கோவிந்தராஜன் தலைமையிலான கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட 15 சதவீதம் உயர்த்தியதுடன் 201415, 201516 ஆகிய ஆண்டுகளுக்கு தலா 10 சதவீதம் கட்டணத்தை உயாத்தினர். ஒவ்வொரு பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியம், நிர்வாக பராமரிப்பு செலவு என பலவற்றை ஆய்வு செய்து அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தில் அதிகபட்சமாக 12ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கே ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாகத்தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் எல்.கே.ஜிக்கே லட்சக்கணக்கில் நன்கொடை என்ற பெயரில் வசூலித்து வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் வசூலிப்பதில்லை என்பதுதான் பெற்றோர்களின் குற்றச்சாட்டு. சரி... இதை தட்டிக்கேட்கலாம் என்று போனால், அதை வைத்தே குழந்தைகளை பழி வாங்கும் நடவடிக்கையில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன. இதற்கு பயந்துதான் பெற்றோர்கள் பலரும் எதையும் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பும், அட்மிஷன் நடக்கும் சமயத்திலும் பள்ளியை பெற்றோர் முற்றுகையிடும் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளன. சமீபத்தில் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளி கடந்தாண்டு கட்டணத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்து கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கெல்லாம் கல்வி அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தற்போது, 201415ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தமுறையாவது, கல்வித்துறை அதிகாரிகள் கல்வி கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என்று இப்போதிருந்தே கண்காணிக்க வேண்டும், ஏற்கனவே அட்மிஷனை முடித்த பள்ளிகளிலும் முறையான விசாரணை நடத்த வேண்டுமென்பதே பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பொது மக்கள் கூறியதாவது தனியார் பள்ளிகளில் எப்போது அட்மிஷன் நடக்கிறது என்பதையே ரகசியமாக வைத்திருக்கிறார்கள். நோட்டீஸ் போர்டில் கூட அறிவிப்பு வெளியிடுவதில்லை. இறுதி தேர்வு முடிந்த உடனேயே அவசர அவசரமாக அட்மிஷனை காதும் காதும் வைத்த மாதிரி நடத்துகிறார்கள். சில பள்ளிகளில் இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்தால்தான் அட்மிஷன் அப்ளிகேஷனே வாங்க முடிகிறது. இதற்கெல்லாம் காரணம், ஏரியாவிலேயே அந்த ஸ்கூல்தான் ரொம்ப பிரபலம் என்ற மாயை ஏற்படுத்துவதற்குதான். மேலும் அவசர அவசரமாக அட்மிஷன் நடத்துவது, அரசு ஏதாவது புது உத்தரவை போடுவதற்குள் அவர்கள் அட்மிஷன் முடித்து கட்டணம் வசூல் செய்வதற்காகத்தான்... இது, புரசைவாக்கம் தெருவை சேர்ந்த காயத்திரி அனுபவம்... எல்கேஜி படிக்கச் சேர்க்கும் குழந்தைகளுக்கு கூட டொனேஷனாக ஆயிரக்கணக்கில் கேட்கிறார்கள். அப்படி டொனேஷன் கொடுத்தால்தான் சீட்டே கிடைக்கிறது சில பள்ளிகளில். டொனேஷன் கொடுத்து விட்டு ஸ்கூல் பீஸைப் பார்த்தால் அதுவும் தலை சுற்றவைக்கிறது. எல்கேஜி குழந்தைக்கு லைப்ரரி, சுற்றுலா கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். எல்கேஜி குழந்தைக்கு எதுக்கு லைப்ரரி என்பது புரியவில்லை. அந்த மாதிரியான தேவையில்லாத வசதிகள் இருப்பதாக கூறி அதில் ஆயிரக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். மயிலாப்பூரை சேர்ந்த வைதியநாதன் அனுபவம் இது... தனியார் பள்ளிகளால் பெற்றோர் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அரசும், பல்வேறு கமிட்டி அமைத்து தனியார் பள்ளிகளின் அநியாய வசூலை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கிறது. ஆனாலும் அரசை காட்டிலும் தனியார் பள்ளிகள் மிக வேகமாக செயல்பட்டு அரசு உத்தரவு வருவதற்கு முன்பாகவே அநியாய கட்டணத்தை வசூலித்து முடிக்கிறார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நம் பிள்ளைகளும் நுனி நாக்கில் இங்கிலிஷ் பேச வேண்டும், திறமையானவனாக எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பள்ளிகள், கல்வியை ஒரு வியாபாரமாக மாற்றியிருக்கிறார்கள். அண்ணா நகர் சுசிலாவின் ஆதங்கம் இது. ஜெயலெட்சுமி (மேற்குமாம்பலம்) : ஸ்கூல் பீஸ் கட்டும் போதே, வாகன வசதி, யூனிஃபார்ம் போன்றவற்றுக்கும் சேர்த்து 12ல் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை கறந்து விடுகிறார்கள். ஆனால், நாமே ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து பிள்ளை அனுப்பினாலும், நாமே யூனிஃபார்ம் எடுத்து தைத்தாலும் இந்த செலவில் பாதி கூட வராது. பல பள்ளிகளில் நாம் செலுத்தும் கட்டணத்திற்கு சரியான பில்லை தருவதில்லை. பில் கேட்டால் நாம் கட்டும் பில்லில் நான்கில் ஒரு மடங்கைத்தான் பில் கட்டணமாக தருகிறார்கள். சாதாரணக் கடையில் கூட சரியான பில் தருகிறார்கள் அப்படியிருக்க பள்ளிகள் பில் தர மறுக்கின்றன. பள்ளிகளில் நாம் கட்டும் கட்டணத்திற்கு முறையான பில் தரவேண்டும் என்று அரசு சட்டமியற்றவேண்டும்.

-
அஷ்ரப்

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?

எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கண்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும்

சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவது தான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.

கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்து விடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும் போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.

அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்து விட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகி விடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-
அஷ்ரப்

நம்பினால் நம்புங்கள்

* உலகிலேயே பெரிய விதை தேங்காய்தான்!

* இந்தியாவில் மட்டுமே பசு உரிமைச் சட்டம் உள்ளது.

* இஸ்ரேலில் மூன்றில் ஒருவர் செல்போன் பயன்படுத்துகிறார்கள். உலகின் பல நாடுகளை விட இது அதிகம். இந்தியாவில்? உங்களுக்கே தெரியும்!

* பனிக்கரடிகளின் ரோமம் நிறமற்றது. சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் அவை வெண்மையாகத் தோன்றுகின்றன.

* கோழியின் கல்லீரலைப் பயன்படுத்தி ‘ஏ’ குரூப் ரத்தத்தை ‘ஓ’ குரூப் ரத்தமாக மாற்ற முடியும்.

* நாய்களில் டால்மேஷனுக்கு மட்டும் மூட்டு நோய்கள் ஏற்படக்கூடும்.

* ஜம்போ ஜெட் விமானம் புறப்படுவதற்கு மட்டுமே 4 ஆயிரம் கேலன் எரிபொருள் தேவை.

* இங்கிலாந்து மன்னர் ஆறாவது எட்வர்ட் பள்ளிக்கூடத்தில் பயங்கரமாகக் குறும்புகள் செய்வாராம். அவரை அடிக்க முடியாது என்பதால், வேறொரு மாணவனுக்கு பிரம்படி விழுமாம்!

* பூமியில் உள்ள வேறு எந்த உயிரினத்தை விடவும், மனிதர்களை அதிக அளவு கொல்வது கொசுக்கள்தான்!

* விண்வெளி செல்லும் வீரர்கள் அங்கு ஈர்ப்புவிசை இல்லாததால் கண்ணீர் விட்டு அழக்கூட முடியாது!

* மேற்கத்திய நாடுகளிலுள்ள பெண்கள் வாழ்நாளில் சராசரியாக இரண்டரை கிலோ லிப்ஸ்டிக் உபயோகிக்கிறார்கள்.

-
அஷ்ரப்

பொக்கோ ஹரம் என்ற போலித் தடை!!!

இசுலாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நைஜீரியாவில் பொக்கோ ஹரம் என்னும் அமைப்பு செயற்படுகின்றது. சுனி முஸ்லிம்களின் ஒரு பிரிவாகக் கருதப்படும் இந்த அமைப்பு தம்மை மிகவும் மரபுவழி இசுலாமியர்கள் என்றும் இசுலாமிய விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் என்றும் தூய்மையானவர்கள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் பல அடைமொழிகளால் அழைக்கின்றார்கள். நைஜீரியா முழுவதும் இசுலாமிய ஷரியா சட்டம் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உலகப் பொருளாதார மாநாடு
எண்ணெய் வளம் மிக்க நைஜிரியாவில் உலகப் பொருளாதார மாநாடு நடக்கும் வேளையில் அங்கு இளம் பெண் பிள்ளைகள் இருநூற்றுக்கு மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நைஜீரிய அரசு கடத்தப்பட்ட பெண் பிள்ளைகளிலும் பார்க்க பொருளாதார மாநாட்டில் அதிக கவனம் செலுத்துவதாக வட நைஜீரிய மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். உலகம் தொலைந்து போன மலேசிய விமானத்தைத் தேடுவதில் காட்டும் அக்கறை கடத்தப்பட்ட பெண்பிள்ளைகளை மீட்பதில் காட்டவில்லை. முன்னூறு மக்கள் கொல்லப்பட்ட தென் கொரிய படகு விபத்திற்காக தலைமை அமைச்சர் பதவி விலக முன்வந்தார். நைஜீரியாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நைஜீரய அதிபர் தனது நாடு ஆபிரிக்காவிலேயே பொருளாதார வலுமிக்க நாடு என உலகிற்குக் காட்ட முயல்கின்றார்.

வேறு பெயர்.
நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் இவர்களை பொக்கோ ஹரம் என அழைக்கின்றனர். ஆனால் இவர்களின் அமைப்பின் உண்மையான பெயர் "புனிதப் போரையும் இறைதூதுவரின் போதனைகளையும் பரப்புரை செய்யும் மக்கள்" என்பதாகும். பொக்கோ ஹரம் என்பது போலித் தடை எனப் பொருள்படும். தாம் போலிகள் எனக் கருதுபவற்றைத் தடை செய்யும் அமைப்பு இது. வட நைஜீரியா, தென் கமரூன், நிகர் ஆகிய நாடுகளில் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அபுபக்கர் ஷெகௌ (Abubakar Shekau) இந்த அமைப்பின் தலைவர் எனச் சொல்லப்படுகின்றது. இவர்களுக்குத் தேவையான நிதியை இவர்கள் வங்கிக் கொள்ளைகள் மூலம் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது. சுனி முஸ்லிம்கள் வாழும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து இவர்களுக்கு நிதி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

நவீனம் வேண்டாம்.
பொக்கோ ஹரம் அமைப்பினர் பல இசுலாமியர்களையும் கிறித்தவர்களையும் கண்டபடி கொல்கின்றனர். நவீனமான எதுவும் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மத சார்பின்மை என்ற சொல்லைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அல்லாவின் போதனைகளை மீறி நடப்பவர்கள் எல்லை மீறியவர்களாகும் என்ற குரான் வாசகம் இவர்களின் தாரக மந்திரமாக உள்ளது. கார் குண்டு வெடிப்புக்கள், தற்கொடைக் குண்டு வெடிப்புக்கள் போன்றவற்றை நிறையச் செய்கின்றார்கள். 2014-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,500இற்கு மேற்பட்டவர்களை கொன்றுள்ளனர். ஆசியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியாவில் பொக்கோ ஹரம் அமைப்பினர் மிகவும் அச்சத்தை உருவாக்கியுள்ளார்கள்.

12 வயதுக்கு மேல் படிக்கக் கூடாது.
நைஜீரிய அரசு இசுலாமிய விதிகளுக்கு எதிராகச் செயற்படுவதாக பொக்கோ ஹரம் அமைப்பினர் ஆத்திரம் அடைந்துள்ளார்கள். இவர்கள் மேற்கத்தைய கலாச்சாரம், சமூக முறைமை போன்றவை தடைசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். பெண்கள் 12 வயதிற்குப் பிறகு பாடசாலைக்குச் செல்லக் கூடாது என்ற கொள்கையால் உந்தப்பட்டு பொக்கோ ஹரம் அமைப்பினர் அவர்களைக் கடத்திச் சென்று கட்டாயட் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

பொக்கோ ஹரம் அமைப்பின் வரலாறு
2002-ம் ஆண்டு மொஹமட் யூசுப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பொக்கோ ஹரம் அமைப்பு ஆரம்பத்தில் இசுலாமிய மத போதனையை ஏழைப் பிள்ளைகளுக்கு செய்து வந்தது. பின்னர் இது இசுலாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தது. பின்னர் 2009-ம் ஆண்டு படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்துவதை இவர்கள் வழமையாகக் கொண்டிருந்தனர். பல காவல் நிலையங்கள் மீது தாக்குதல்கல் நடத்தியது. 2009 ஆண்டு நைஜீரியப் படையினர் இந்த அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடாத்தி அதன் தலைவரைக் கொன்றதுடன் பலரைக் கைதும் செய்தனர். கொல்லப்பட்ட தலைவர் மொஹமட் யூசுப்பின் உடலின் படத்தை தொலைக்காட்சியில் காட்டிய நைஜீரிய அரசு பொக்கோ ஹரம் அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டது என மக்களுக்கு அறிவித்தனர். 2010-ம் ஆண்டு இவர்கள் மீண்டும் அபுபக்கர் செக்கௌ தலைமையின் கீழ் திரண்டு எழுந்தனர். சிறைச் சாலையின் மீது தாக்குதல் நடாத்தி தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தனர். 2010-ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் 2011 நத்தார் தினத்திலும் இவர்கள் கிறித்தவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்திப் பலரைக் கொன்றனர். தம்மீது நடாத்திய தாக்குதல்களுக்கு அவை பழிவாங்கல்கள் என்றனர் பொக்கோ ஹரம் அமைப்பினர். 2011-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறை பொக்கோ ஹரம் அமைப்பு தமக்கு எதிரானது என அறிவித்தனர். அத்துடன் பொக்கோ ஹரம் அமைப்பிற்கும் அல் கெய்தாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க அரசு கருத்து வெளியிட்டது. 2013-ம் ஆண்டு ஒரு இசுலாமிய வழிபாட்டு நிலையம் மீது தற்கொடைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர். பல இசுலாமிய மத போதகர்களையும் தலைவர்களையும் இலக்கு வைத்துப் பல தாக்குதல்கள் 2012, 2013-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. 2013-ம் ஆண்டில் கமரூன் நாட்டில் இவர்கள் தமது முதல் தாக்குதலை மேற்கொண்டனர்.

பொக்கோ ஹரம் ஓய்வதில்லை
2013-ம் ஆண்டு மே மாதம் நைஜீரியாவின் பாமா நகரில் பொக்கோ ஹரம் உறுப்பினர்கள் நைஜீரிய அரச படை முகாம், காவல் நிலையம், சிறைச்சாலை ஆகியவற்றின் மீது பெரும் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். நைஜீரியப் படையினரின் மனைவிகளையும் பிள்ளைகளையும் இதில் பொக்கோ ஹரம் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். தமது உறுப்பினர்களின் மனைவிகள் பிள்ளைகளைப் படையினர் கைது செய்வதற்கு தாம் பழிவாங்குவதாகத் தெரிவித்தனர். இத்தாக்குதல் பொக்கோ ஹரம் அமைப்பினர் தமது தாக்குதிறன், படைக்கலன் போன்றவற்றை அதிகரித்துள்ளனர் என்பதைக் காட்டியது. நைஜீரிய அரசிடம் இருந்து முன்று மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தைப் பெற்றுக் கொண்டு தம்மிடமிருந்த கைதிகளை விடுதலை செய்தனர். மாலியில் பிரெஞ்சுப் படையினர் தலையிட்டதற்குப் பழிவாங்க ஒரு பிரெஞ்சுக் குடும்பத்தையும் பொக்கோ ஹரம் அமைப்பினர் கைப்பற்றி பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்தனர்.

மேற்கத்தையக் கல்வி முறைமைக்கு எதிரான போர்
கடந்த சில மாதங்களாக பொக்கோ ஹரம் அமைப்பினர் மேற்கத்தையக் கல்வி முறைமைக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி உள்ளனர். மேற்கத்தைய கல்வி முறைமையை ஒழித்து இசுலாமியக் கல்வி முறைமை நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதிலும் பெண்கள் கல்வியை நிறுத்திவிட்டு போய் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பொக்கோ ஹரம் அமைப்பினர் மிரட்டுவதாக மேற்கத்தைய ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. ஏப்ரல் மாதம் 16-ம் திகதி இருநூற்றிற்கும் மேற்பட்ட 12இற்கும் 15இற்கும் இடைப்பட்ட வயதுப் பெண் பிள்ளைகளை பொக்கோ ஹரம் அமைப்பினர் நைஜீரிய சிபோக் நகரப் பாடசாலைகளில் இருந்து கடத்திச் சென்றதாகச் சொல்லப்படுகின்றது. அதற்கு முன்னர் 59 பாடசானை ஆண் மாணவர்களை பொக்கோ ஹரம் அமைப்பினர் கொன்றாதாகவும் செய்திகள் வெளி வந்தன. கடத்தப்பட்ட பெண்களை தாம் மீட்டதாக முதலில் நைஜீரிய அரசு செய்தி வெளிவிட்டது. பின்னர் அது உண்மையல்ல எனச் செய்திகள் வெளியாகின. ஒன்பது வயதுச் சிறுமிகள் கூடக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

பெண்கள் விற்பனைக்கு
பொக்கோ ஹரம் அமைப்பினர் தம்மிடம் உள்ள 276 இளம் பெண்களை விற்பனை செய்யப் போவதாக காணொளி மூலம் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியுட்டுள்ளது. மே மாதம 6-ம் திகதி மேலும் 14 இளம் பெண்கள் கடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. தம்மிடம் உள்ள பிள்ளைகளை விற்கும்படி அல்லா தமக்கு உத்தரவிட்டுள்ளதாக பொக்கோ ஹரம் அமைப்பினர் தெரிவித்ததாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கடத்தப் பட்ட பல பெண்கள் பொக்கோ ஹரம் அமைப்பின் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துள்ளனர் என சிபிசி நியூஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அச்செய்தியில் ஐம்பது இளம் பெண்கள் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. நைஜீரிய அதிபர் ஜோனார்த்தன் குட்லக் கிறித்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட தென் நைஜீரியாவில் வாழ்கின்றார் வட நைஜீரியர்கள் அடக்கு முறைகளின் கீழ் அல்லல் படுவதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை என வட நைஜீரியர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். பெண்பிள்ளைகளைக் கடத்தி வைத்திருக்கும் இடங்கள் நைஜீரியப் படையினர் செல்வதற்கும் கடினமான பெரிய காட்டுப் பகுதியாகும். கடத்தப்பட்ட பெண்கள் பன்னிரண்டு அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படுகின்றார்கள். சாட், கமரூன் நாடுகளில் விற்பனை நடக்கிறதாம்.

கல்லாத சாத்தான் சொல்லும் குரான்
பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவர் அபூபக்கர் ஷெக்கௌ படித்தவரல்லர். அவர் இசுலாமிய மார்க்கத்தைப் பற்றி கற்றவரும் அல்லர். உணர்ந்தவரும் அல்லர். அந்தப் புனித மார்க்கத்திற்கோ அல்லது அதன் போதனைகளுக்கோ வியாக்கியானக் கொடுக்கும் அருகதை அற்றவர் அபூபக்கர். நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் கமரூன் நாட்டு எல்லையில் இருக்கும் கம்போரு அங்காலா நகரில் உள்ள சந்தைப் பகுதியில் பொது மக்கள் மீது பொக்கோ ஹரம் அமைப்பினர் தாக்குதல் நடத்தி முன்னூற்றிற்கு மேற்பட்டவர்களைக் கொன்றனர். கம்போரு அங்கால நகரில் இருந்த படையினர் கடத்தப்பட்ட பெண்களைத் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டதால் நகரம் பாதுகாப்பின்றி இருந்தது. கடத்தப்பட்ட பெண்களில் இருந்த கிருத்தவர்கள் இசுலாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

கைதிகள் பரிமாற்றம்
நைஜீரியா கைது செய்து வைத்திருக்கும் தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தால் தம்மிடம் இருக்கும் பெண்களை விடுதலை செய்வதாக பொக்கோ ஹரம் அமைப்புத் தெரிவித்தது. இது பற்றி கருத்துத் தெரிவித்த நைஜீரிய அரசு தாம் பெண்களை விடுவிக்க எல்லா வழிவகைகளையும் பின்பற்றுவோம் என்றது.

தலையிடும் அமெரிக்கா
நைஜீரியாவில் அரச படைகளுக்கு ஆலோசனை வழங்க தனது படைத்துறை நிபுணர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்க விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன . கடத்தப்பட்ட பெண் பிள்ளை விடுவிக்க தன்னாலான எல்லா உதவிகளையும்செய்வதாக பராக் ஒபாமா அறிவித்துள்ளார். என்கெங்கு எண்ணெய் வளம் உண்டோ அங்கெல்லாம் அநியாயம் நடந்தால் (சிலசமயம் அநியாயம் திட்டமிட்டு உருவாக்கப்படும்) அங்கு சென்று நியாயத்தைஅமெரிக்கா நிலைநாட்டும்.

ஆதார காணொளி - http://www.youtube.com/watch?v=gMznuJ621Yg



-
அஷ்ரப்

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.


-
அஷ்ரப்

உலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம்

ஹைப்ரிட் ஏர்' நிறுவனம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி பிரிட்டனில் பறக்க வைத்துக் காட்டிய ஒரு விமானம், உலகையே பிரமிக்க வைத்திருக்கிறது. 'ஹெச்ஏவி 304' என்ற இந்த விமானம், உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமையைப் பெறுகிறது. ஒரு விமானம், ஒரு ஹெலிகாப்டர், ஒரு ஏர்ஷிப் ஆகிய மூன்றையும் இணைத்த கலவை போல இது இருக்கிறது.

* உலகின் நீளமான விமானம் இதுதான். இதன் நீளம் 302 அடி. இப்போதைய நீளமான பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 (239.5 அடி), சரக்கு விமானமான அனடோனோவ் ஏஎன்225 (276 அடி) ஆகியவற்றைவிட நீளமானது. இதன் உயரம் 85 அடி. அகலம் 143 அடி.

* இது வானத்தில் எழுவதற்கு நீளமான ரன்வே தேவையில்லை. ஒரு ஹெலிகாப்டரைப் போல அப்படியே மேலெழும்பும் திறன் படைத்தது.

* மற்ற விமானங்களைப் போல இது அதிக எரிபொருளைத் தீர்க்காது. ஹீலியம் நிரப்பப்பட்ட ஒரு பலூன் போல இது மிதப்பதால், தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் வரை வானத்தில் மிதந்து கொண்டிருக்கும். இயற்கைச் சீற்றங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், மக்களை மீட்கவும், போர்க்கால கண்காணிப்புக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

* இருபது டன் சரக்குகளை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் திறனுள்ளது என்பதால், பெரிய தளவாடங்களை அவசரமாக கண்டம் விட்டு கண்டம் எடுத்துச் செல்லவும் இதைப் பயன்படுத்தலாம்.

* இவ்வளவு பெரிதாக இருந்தாலும், இது உயரத்திலும் பறக்கும்; வேகமாகவும் செல்லும். தரை மட்டத்திலிருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில், மணிக்கு 148 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது இது.

* இதன் அடுத்த கட்டமாக 'ஏர்லேண்டர் 50' என்ற விமானத்தை உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது. இது 50 டன் சரக்குகளை கையாளும் திறன் படைத்ததாம்.

-
அஷ்ரப்

ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான் பார்க்க முடியும். அது மட்டுமல்ல... ஸ்டெதாஸ்கோப்பையே வருங்காலத்தில் மியூசியத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும். இது மருத்துவ அறிவியல் நிகழ்த்தப் போகும் மாயாஜாலம்!
கால் நூற்றாண்டுக்கு முன்பு கிராமபோனில்தான் பாட்டுக் கேட்டோம். பிறகு ஆடியோ கேசட் வந்தது; அது போய் சி.டி. வந்தது; இப்போது எம்.பி. 3, எம்.பி.4 என தொழில்நுட்பம் எகிறிக் கொண்டிருக்கிறது. அது மாதிரியே மருத்துவ உபகரணங்களிலும் அப்டேட் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. குழாய் வடிவத்தில் இருக்கின்ற ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன் மாடலில் ஒரு நவீன ஸ்டெதாஸ்கோப்பை இங்கிலாந்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்றைய ஸ்டெதாஸ்கோப்பின் ஹிஸ்டரியைப் பார்த்து விடலாம்.

1816ல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் டாக்டர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள டாக்டர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக்.

1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் லீ லோவர் அரண்மனையைச் சுற்றி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத்துண்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத்துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப்பினான். இன்னொரு சிறுவன் மரத்துண்டின் மறுமுனையைத் தன் காதில் வைத்துக் கொண்டு அந்த ஒலியைக் கேட்டு குதூகலித்தான். பார்த்த லென்னக், 'இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே' என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார்.

இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும் மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். என்ன ஆச்சர்யம்... நோயாளியின் நெஞ்சில் நேரடியாக காதை வைத்துக் கேட்பதைவிட பல மடங்கு துல்லியமாகக் கேட்டது இதயத்தின் ஒலி. இதை அடிப்படையாக வைத்து 1819ல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட, ஒரு காதை மட்டுமே வைத்து கேட்கக் கூடிய மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெதாஸ்கோப்! அதன்பிறகு அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843ல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெதாஸ்கோப் உருவானது. ஸ்டெதாஸ்கோப்பின் முனையில் வட்டமாகவுள்ள 'டயாஃப்ரம்' இதய ஒலிகளைக் கிரகித்து அதோடு இணைந்த ரப்பர் குழாய்க்குள் அனுப்புகிறது.

அங்கு இருக்கும் காற்று, இதயஒலி அலைகளைப் பெருக்கி, ஒருங்கிணைத்து அனுப்புவதால் அந்த ஒலிகளைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. இதுதான் ஸ்டெதாஸ்கோப்பின் அடிப்படைத் தத்துவம். கடந்த 200 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் ராஜமரியாதையுடன் வலம் வந்துகொண்டிருக்கும் ஸ்டெதாஸ்கோப்புக்கு மாற்றாக இங்கிலாந்தில் 'ஜெனரல் எலக்ட்ரிக் ஹெல்த் கேர் சிஸ்டம்' எனும் நிறுவனம் 'விஸ்கேன்' (க்ஷிஷிநீணீஸீ ) என்கிற நவீன ஸ்டெதாஸ்கோப்பைத் தயாரித்துள்ளது. இது மருத்துவ உலகில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது?

“வௌவால்கள் பறப்பதற்குப் பயன்படுத்தும் டெக்னாலஜிதான் இதிலும் பயன்படுகிறது” என்கிறார் நிணி நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் இம்மெல்ட். “வௌவால்கள் இருட்டில் பறக்கும்போது எதிரில் ஏதேனும் தடை உள்ளதா என்று தெரிந்து கொள்ள, அல்ட்ரா சவுண்டை உண்டாக்கிக் காற்றில் அனுப்பும். வழியில் தடை இருந்தால் அந்த ஒலி எதிரொலித்துத் திரும்பும். அதை உணர்ந்து, வௌவால்கள் திசை மாறிப் பறக்கும். ஒலிக்குண்டான இந்த தனித்தன்மையை அடிப்படையாக வைத்து விஸ்கேனை உருவாக்கியுள்ளோம்.

'விஸ்கேன்' சட்டைப் பையில் வைத்துக் கொள்ளும் அளவுக்குச் சிறியது. இது பேட்டரியில் இயங்குகிறது. ஸ்மார்ட் போன் மாடலில் இருக்கும் இந்தக் கருவியில் ஒரு சிறிய திரை மற்றும் கீ பேடு உள்ளது. ஹேண்ட் மைக் அளவில் 'டிரான்ஸ்டூசர்' (ஜிக்ஷீணீஸீsபீuநீமீக்ஷீ) எனும் கருவி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முனையை மார்பின் மீது வைக்க வேண்டும். அப்போது இது கேளாஒலி அலைகளை உற்பத்தி செய்து, இதயத்துக்கு அனுப்புகிறது. அவை இதயத்தில் மோதி, எதிரொலித்து வருவதை உள் வாங்கி, 3டி படங்களாக திரையில் பதிவு செய்கிறது. இதன் மூலம் இதயம் இயங்குவதை திரையில் பார்க்க முடியும். இதயத்துடிப்பு எண்ணிக்கை, லயம், இதய வால்வுக் கோளாறுகள், இதயத்தில் ரத்த ஓட்டம் போன்றவற்றை அடுத்த நிமிடத்தில் அறியலாம்.

டாக்டர்கள் இதய ஒலிகளைக் காதால் கேட்பதில்கூட சந்தேகம் வரலாம். இதில் சந்தேகம் என்பதே வராது. நோய்க்கணிப்பு மிகச் சரியாக இருக்கும். இக்கருவியைப் பயன்படுத்தி நுரையீரல் நோய்களையும் வயிறு நோய்களையும்கூட அறியலாம். தற்போதைய ஸ்டெதாஸ்கோப் முனை போல் டிரான்ஸ்டூசரின் முனையை மாற்றி அமைத்துவிட்டால், இது ஒரு கையடக்க ஸ்டெதாஸ்கோப் போல் காட்சி தரும்” என்கிறார் அவர். கிரேட்!

-
அஷ்ரப்

விண்வெளியில் ஒரு நாள்

சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு, நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான்) அவர்களுக்கான வேலை செட்யூல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும். தினம் ஒன்பது மணிநேரம், ஐந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம். ஆனால் பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.

* காலை 6 மணி:

நாளின் துவக்கம். பூமியை போல அவர்களுக்கு காலை 6 மணிக்கு சூரிய உதயம் கிடையாது. ஏனெனில் ஒருநாளில் அவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் தோன்றும். ( அதாவது ஐ.எஸ்.எஸ் ஒரு நாளுக்கு 16 முறை பூமியை சுற்றும்.) காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்துவிடும். எழுந்து கொள்ள வேண்டும்.

* காலை 7 மணி:

உடல் நலம் பேணல் (Hygiene), காலை உணவு, பல் துலக்குதல். பேஸ்டால் பல் துலக்கியபின் அப்படியே விழுங்கிக்கொள்ளலாம். அதிக நுரைவராத சாம்பு தலைக்கு போட்டு கொள்ளலாம். தலை குளித்தல் (தினமும் இது தேவையில்லை) வைப்பர் மற்றும் டிரையர் கொண்டு உலர வைத்துக்கொள்கிறார்கள்.

* காலை 7.30 மணி:

கான்பெரன்ஸ் ஐ.எஸ்.எஸ் ல் எல்லோரும் ஒரே இடத் தில் கூடி தரை கட்டுப்பாட்டு நிலையத் தில் தொடர்பு கொண்டு அன்றைய வேலைக்காண கட்டளையை பெறுகிறார்கள். தங்களின் பிரச்னைகளை தெரிவிக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து அவர்களுக்கு வந்த தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

* காலை 8 மணி:

பயிற்சி நேரம் எடையற்ற நிலையில் உடல் பல பிரச்னைகளை சந்திக்கும். அதனால் கட் டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காலின் கீழிருக்கும் ஸ்ராப்பினால் தங்கள் உடலை இணைத்துக்கொண்டு நிலையான சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்கிறார்கள் இது கால் சதைப்பாகங்களுக்கு மற்றும் உடலின் நரம்புகளுக்கு உறுதி அளிக்கிறது. இதேபோல் ட்ரட்மில் துரித நடையோட்ட பயிற்சியும் செய்கிறார்கள்.

* மதியம் 1 மணிக்கு:

உணவு இடை வேளை. இந்த மதிய உணவு அவர்களின் விருப்ப உணவாக பூமியில் முன்னதாக தீர்மானிக்கப்பட்ட மூன்றில் ஒன்றாக இருக்கும். விருப்ப உணவு ஏற்கனவே தயார் செய்யப்பட்டு பேக்கிங்கில் இருக்கும். சிலவற்றை உடனடியாக சாப்பிடும் வகையிலும் சிலவற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து ஓவனில் சூடாக்க வேண்டி இருக்கும்.

* மதியம் 2 மணி:

வேலை துவக்கம் ஐ.எஸ்.எஸ் ல் உள்ள கிப்போ சோதனைக்கூடத்தில் விண்வெளி மருந்து, உயிரியல், புவி சூழ்நிலை ஆய்வு, பொருள் உருவாக்கம், புரோட்டீன் படிம உருவாக்க பெட்டியில் சில சோதனைகள் இப்படி,...

* மாலை 5 மணிக்கு:

உடற்பயிற்சி. இரண்டு ட்ரெட்மில்கள், இரண்டு நிலையான சைக்கிள், ஒரு எடை தூக்கி பயிற்சி செய்யும் சாதனம் இவைதான் நிரந்திர பயிற்சி சாதனங்கள். எந்த பயிற்சி செய்வதாக இருந் தாலும் அவர்கள் தரையோடு இருக்கும் ஸ்ட்ராப்பில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

* மாலை 6 மணிக்கு:

வேலை. விண்வெளி நிலையத்திற்குள்ளே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய சோதனைக்கூடம் கொலம்பஸ். இது மைக்ரோ கிரேவிட்டி சயன்ஸ் க்ளோவ் பாக்ஸ் என அழைக்கப்படுகிறது. இங்கு சில சோதனைகளை செய்கிறார்கள். விண்வெளி வீரர்களுக்கு அவர் கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உண வுகளை தேவையான அளவிற்கு வழங்கப்படுகிறது. ஒருவாரம் அல்லது ஒருமாதம் தங்குவதாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் உணவுகள் வினியோகிக்கப்படுகிறது. கூடுதலாக ஆரஞ்சு பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் டயட் என்று சொல்லப்படுகிற நிலையை அவர்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* இரவு 8.30 மணி:

கான்ஃபரன்ஸ் (கலந்துரையாடல்) தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தோடு அன்றைக்கு மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்கள், அடுத்த நாள் மேற்கொள்ளப்போகும் பணி இவற் றை விவாதிக்க வேண்டியிருக்கும். விண்வெளி நடை பயில (ஸ்பேஸ் வாக்) மேற்கொள்ளப்படுகிறது. அடு த்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு கான்ஃபரன்ஸ் முறையில் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

* இரவு 9.30 மணி:

ஓய்வு நேரம் துவக்கம். இப்போது எடையற்ற நிலையில் சில விளையாட்டுகளையும் விளையாடுகிறார்கள். புத்தகம் படித்தல், டிவிடி பார்த்தல், இசை கேட்டல், லேப்டாப்பின் மூலம் தங்கள் குடும்பத்தினரோடு பேசி நேரத்தைக் கழிக்கலாம். ஒலி ஒளிகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.

* இரவு 10மணி:

தூக்கம். கேஷுவல் டிரஸில் தங்களுக் கென கொடுக்கப்பட்டிருக்கும் தூங்குவதற்கான குழாய் படுக்கையில் உறங்கலாம். கண்கள் மற்றும் காதுகளை மறைக்கும் பிரத்தியேக முகமூடிகளை அணிந்து கொள்கிறார்கள். இந்த பை போன்ற படுக்கை மிதந்து சென்றுவிடாமல் இருக்க பெல்டுகளால் இணைக்கப்பட்டிருக்கும். அறிவியல் உலகிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல கஷ்டங்களுக்கு தம்மை பழக்கி கொண்டு, சுக துக்கங்களை மறந்து அவர்கள் ஆற்றும் பணிகள் மிகவும் அற்புதமானவை.
-

-அஷ்ரப்

சுதந்திரம் பெற்ற பின் 1952ம் ஆண்டில் இருந்து இதுவரை 16 நாடாளுமன்ற தேர்தல்களை இந்தியா சந்தித்து இருக்கிறது

சுதந்திரம் பெற்ற பின் 1952ம் ஆண்டில் இருந்து இதுவரை 15 நாடாளுமன்ற தேர்தல்களை இந்தியா சந்தித்து இருக்கிறது. 15-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது.  16-வது பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முடிவு இன்று வெளியாகிறது.
காங்கிரஸ் கட்சி 11 முறை ஆட்சிக் ஆட்சி அமர்ந்துள்ளது. பா.ஜ.க 3 முறை ஆட்சி நடத்தி இருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல்கள் மற்றும் அரசுகள் குறித்து உங்கள் பார்வைக்கு..
தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1952
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
வெற்றி பெற்ற கட்சி - காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 489-ல் 364.
பெற்ற ஓட்டு சதவீதம் -- 44.99
முதல் பிரதமராக ஜவகர்லால் நேரு பதவி ஏற்றார்.
தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1957
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
இந்த தேர்தலில் மாநில கட்சிகள் எழுச்சி பெற தொடங்கின.
வெற்றி பெற்ற கட்சி - காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 494-ல் 371.
பெற்ற ஓட்டு சதவீதம் - 47.78
நேரு மீண்டும் பிரதமர் ஆனார்.
1952 முதல் நாடாளுமன்றம்
முதன் முதலாக பாரதீய ஜனசங்கத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாஜ்பாய் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 1962
காங்கிரஸ் முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
வெற்றி பெற்ற கட்சி - காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 494-ல் 361.
பெற்ற ஓட்டு சதவீதம் -- 44.72
3-வது முறையாக நேரு பதவியேற்றார். ஆனால் 1964ம் ஆண்டு மரணம் அடைந்தார்.  நேருவின் மரணத்தால் குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமர் ஆனார். அதன்பின் லால்பகதூர் சாஸ்திரி அந்த ஆண்டில் ஜூன் 9-ந் தேதி பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவரும் 1966 ஜனவரி 11-ல் சாஸ்திரி மரணம் அடைந்ததால் குல்சா ரிலால் நந்தா இடைக்கால பிரதமர் ஆனார். அதன் பின் ஜனவரி 24-ந் தேதி இந்திராகாந்தி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
 
தேர்தல் நடந்த ஆண்டு - 1967
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்ய வில்லை.
இந்திரா காந்தியின் தலைமை எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.  தேர்தலுக்கு ஓர் ஆண்டுக்கு முன் இந்திரா காந்திக்கு எதிராக மொரார்ஜி தேசாய் போர்க்கொடி உயர்த்தினார்.
வெற்றி பெற்ற கட்சி - காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 520-ல் 283.
பெற்ற ஓட்டு சதவீதம் - 40.78
இந்த தேர்தலில் இந்திரா காந்தி பிரதமர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 1971
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
வெற்றி பெற்ற கட்சி - இ.காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 518-ல் 352
பெற்ற ஓட்டு சதவீதம் - 43.68
இந்த தேர்தலிலும் இந்திரா காந்தி பிரதமர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 1977
(1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததால் தாமதமாக தேர்தல் நடந்தது.)
ஜனதா பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை.
அதிகாரத்தை இந்திரா காந்தி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வெற்றி பெற்ற கட்சி - ஜனதா
கிடைத்த இடங்கள் - 542-ல் 345
பெற்ற ஓட்டு சதவீதம் - 52.74
இந்த தேர்தலில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். சுமார் 2 1/2 ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, இந்திரா காந்தியின் ஆதரவுடன் லோக்தளம் கட்சியின் சரண்சிங் பிரதமர் ஆகிறார். 1979 ஜூலை 28-ந்தேதி முதல் 1980 ஜனவரி 14-ந் தேதி வரை அவர் பிரதமராக இருந்தார் சரண் சிங்
தேர்தல் நடந்த ஆண்டு - 1980
இந்திரா காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
வெற்றி பெற்ற கட்சி - இந்திரா காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 529-ல் 353
பெற்ற ஓட்டு சதவீதம் - 42.69
இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். பதவியில் இருந்த போது 1984-ம் ஆண்டு அக்டோபர்       31-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1984
இந்திரா காங்கிரஸ் தனது முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
தேர்தலுக்கு முன் நடந்த இந்திரா காந்தி படுகொலை. இதனால் ராஜீவ்காந்தி பிரதமராக பதவி ஏற்றார்
வெற்றி பெற்ற கட்சி - இந்திரா காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 514-ல் 404
பெற்ற ஓட்டு சதவீதம் - 49.10
இந்த தேர்தலில் ராஜீவ்காந்தி பிரதமர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 1989
முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை.
அதிக இடங்களில் வென்ற கட்சி - ஜனதாதளம்
கிடைத்த இடங்கள் - 529ல் 143 பெற்ற ஓட்டு சதவீதம் - 17.79
வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைந்தது. அந்த அரசு சில மாதங்களில் கவிழ்ந்ததால் சமாஜ்வாடி ஜனதாவின் சந்திரசேகர் தலைமையில் புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது. ஆனால் அந்த அரசும் விரைவிலேயே பதவி இழந்தது. 16 மாதங்களில் இரு கூட்டணி அரசுகளும் முடிவுக்கு வந்தது
தேர்தல் நடந்த ஆண்டு - 1991
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
அதிக இடங்களில் வென்ற கட்சி - காங்கிரஸ்
கிடைத்த இடங்கள் - 521ல் 232
பெற்ற ஓட்டு சதவீதம் - 17.79
இடது சாரி கட்சிகளின் ஆதரவில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து தனது முழு பதவி காலத்தையும் பூர்த்தி செய்தது.
தேர்தல் நடந்த ஆண்டு - 1996
முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை.
அதிக இடங்களில் வென்ற கட்சி - பா.ஜ.க.
பா.ஜ.க.- 543ல் 161 வெற்றி பெற்றது
காங்கிரஸ் கட்சி 140 இடங்களில் வெற்றி பெற்றது
பா.ஜ.க. பெற்ற ஓட்டு சதவீதம் - 20.29
இந்த தேர்தலில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் அரசு கவிழ்ந்தது.
அதன்பின் காங்கிரஸ் ஆதரவுடன் தேவேகவுடா தலைமையில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு அமைந்தது. பின்னர் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதன் காரணமாக இந்த அரசும் 1997ம் ஆண்டு ஏப்ரல் வரைதான் நீடித்தது. அதன் பின் ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆக்கப்பட்டார். பின்னர் அவரது அரசையும் 1998-ல் காங்கிரஸ் கவிழ்த்தது.
11வது நாடாளுமன்றம் 2 ஆண்டு காலத்தில் 3 பிரதமர்களை கண்டது
தேர்தல் நடந்த ஆண்டு - 1998
முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை.
அதிக இடங்களில் வென்ற கட்சி - பா.ஜ.க.
பா.ஜ.க. கிடைத்த இடங்கள் - 543ல் 181
காங்கிரசுக்கு கிடைத்த இடங்கள் - 141
பா.ஜ.க. பெற்ற ஓட்டு சதவீதம் - 25.59
வாஜ்பாய் தலைமையில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் ஓர் ஆண்டிலேயே இந்த அரசு கவிழ்ந்து விட்டது.
தேர்தல் நடந்த ஆண்டு - 1999
பா.ஜ.க. முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
அதிக இடங்களில் வென்ற கட்சி - பா.ஜ.க.
பா.ஜ.க. வெற்றி பெற்ற இடங்கள் - 543ல் - 182
பெற்ற ஓட்டு சதவீதம் - 40.80
பாரதீய ஜனதா தலைமையில் தேர்தலை சந்தித்த தேசிய ஜனநாயக கூட்டணி 270 இடங்கள் வெற்றி பெற்றது. வாஜ்பாய் 3வது முறையாக நாட்டின் பிரதமர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 2004
காங்கிரஸ் முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
அதிக இடங்களில் வென்ற கட்சி - காங்கிரஸ்
காங்கிரஸ் கிடைத்த இடங்கள் - 543ல் 141
பா.ஜ.க. வெற்றி பெற்றது 137
காங்கிரஸ் கூட்டணி பெற்ற ஓட்டு சதவீதம் - 35.40
சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது. மன்மோகன்சிங் முதல் முறையாக பிரதமர் ஆனார்.
தேர்தல் நடந்த ஆண்டு - 2009
காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தது.
அதிக இடங்களில் வென்ற கட்சி - காங்கிரஸ்
காங்கிரஸ் வெற்றி பெற்றது - 543ல் 203
பா.ஜ.க. கட்சிக்கு கிடைத்த இடங்கள் 117
காங்கிரஸ் கூட்டணி பெற்ற ஓட்டு சதவீதம் - 37.22
மன்மோகன்சிங் மீண்டும் 2வது முறையாக பிரதமராகி 5 ஆண்டுகளை ஆட்சியை பூர்த்தி செய்துள்ளார்.
அஷ்ரப்

10 May 2014

விளையாட்டாக ஆரம்பித்த 2 மாத நட்பு விபரீதத்தில் முடிந்தது பள்ளி சிறுமி உயிரை பறித்த பேஸ்புக் நட்பு

பெங்களூர் : இரண்டே மாத பேஸ்புக் நட்பு, வாழ்க்கையை புரட்டிப்போட்டது.  விபரீதத்தில் முடிந்தது; 14 வயது பள்ளிச் சிறுமியின் வாழ்க்கையை முடித்தது. செல்போன் கூட வாங்கித் தராமல் வளர்த்தோமே... எப்படி நேர்ந்தது இந்த கொடூரம்  என்று பெற்றோர் இப்போது துயரத்தின் உச்சத்தில் நொறுங்கிப்போய் விட்டனர். பெங்களூரில் ஒரு பிரபல தனியார் பள்ளியில் 9வது வகுப்பு படித்து வந்தாள் ஷிகா. வயது 14. தாய், தந்தை வேலை செய்யும் நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த சிறுமி. செல்போன் இல்லை. பேஸ்புக் பக்கமே போகக்கூடாது என்று கண்டிப்புடன் கட்டுப்பாடு  விதிக்கப்பட்டவள். ஆனால், பள்ளியில் பணக்கார சக மாணவிகள் நட்பால் ஷிகாவின் ஆசை மாறியது; பழக்கம் தடம் புரண்டது.

 பேஸ்புக் நட்பில் சந்தோஷம் கண்டாள். தோழிகளுடன் சேர்ந்து  அடிக்கடி நெட் சென்டருக்கு சென்று ஒரு மணி நேரம் பணம் கட்டி நெட் பார்க்கும் பழக்கம் கொண்டிருந்தாள். அதுவே, வகுப்பை கட் அடிக்கும் அளவுக்கு மாற்றியது. பேஸ்புக்கில் ஆளுக்கொரு நட்பை இந்த சிறுமிகள் தேடிக்கொண்டனர். அப்படி பேஸ்புக்கில் நட்புக்கு ‘வேண்டுகோள்’ கொடுத்தவன் தான் மனோஜ் குமார். செப்டம்பர் மாதம் பேஸ்புக்கில் நட்புக்கு அவன் வேண்டுகோள் கொடுக்க, ஷிகா சம்மதித்தாள்.

பெங்களூர் யெலகங்கா பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படிப்பவன்; ரேஸ் பைக் ஓட்டுவதில் ஆர்வம் உள்ளவன்... என்ற பாணியில் அவனை பற்றி விவரம் பேஸ்புக்கில் கிடைத்தது. தான் நினைத்த மாதிரி அழகான வாலிபன் என்று அறிந்த ஷிகாவுக்கு அவன் சாட்டிங் பிடித்துப்போனது. அவன் வார்த்தைகள் இழுத்தது.
 இப்படி ஆரம்பித்த அடையாளம் தெரியாத நட்பு,

அடுத்து விபரீத கட்டத்துக்கு தாவியது. பெற்றோருக்கு தெரியாமல், யெலகங்காவில் உள்ள மனோஜின் அறைக்கு அடிக்கடி போக ஆரம்பித்தாள் ஷிகா. இருவரும் வகுப்புகளை கட் அடித்து விட்டு வெளியே சுற்றுவ தும், சில நேரங்களில் இரவில் தங்குவதுமாக தொடர்ந்தது. இப்படிதான் அவள் தன்னை முழுமையாக அவனுக்கு தந்தாள்.

சிறிய வயதில் இது வாழ்க்கை தவறு என்று கூட தெரியாமல் விபரீத நட்பை தொடர்ந்தாள். ஒரு நாள், ஒன்னொட பிரண்ட்ஸ் கூட பேஸ்புக்கில் இருக்காங்க இல்லே. அவங்களையும் எனக்கு பிரண்ட்டாக்கு; அவங்க செல்போன் நம்பர் வாங்கித்தாயேன் என்று ஆரம்பித்தான். அப்பாவியாக சிலரின் போன் நம்பர் வாங்கி தந்தாள். இதுவே ஷிகாவை ஒதுக்கி விட்டு, அவளின் தோழிகள் சிலருடன் மனோஜ் புது நட்பு கொள்ள காரணமாக அமைந்தது.

அவர்களுடனும் மனோஜ் ஊர் சுற்ற ஆரம்பித்தான். கேட்டதற்கு, ‘ஏய், பேஸ்புக் நட்புன்னா இப்படிதான். எல்லாம் ஒரு ‘ஃபன்’ (ஜாலி) தான். இதை ஏதோ விபரீதமாக எடுத்துண்டுட்டே. இன்னும் நீ கல்லூரி போகணும். அப்புறம் வேலைக்கு போகணும். அப்போ திருமணம் செய்து யாரோடவாவது செட்டிலாகிடு. இப்படி ஜாலி நட்பெல்லாம் தப்பே இல்லேப்பா...’ என்று ‘யூத்’ தத்துவம் பேசினான்.

தலை சுற்றியது ஷிகாவுக்கு. பேசாமல் திரும்பி விட்டாள். வீட்டில் பெற்றோர் கேட்டும் கூட பேசாமல் வெறுமையை உணர்ந்தாள். சாப்பிடாமல் வாழ்க்கை வெறுத்தாள். நேற்று முன்தினம், தம்பியுடன் விளையாடி விட்டு அவன் அருகே உள்ள மாமா வீட்டுக்கு போவதாக சொல்லி போன பின், வீட்டை தாழிட்டு உள்ளே வந்தாள்.

  விரக்தியின் உச்சகட்டமாக உணர்ந்தாள் போலும். துணியை எடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் வேலையில் இருந்து வீடு திரும்பிய தாய், கதவு பூட்டியபடி உள்ளதை அறிந்து தட்டினாள். திறக்காமல் இருக்கவே சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது உறைந்து போனாள். தந்தையும் பதறிப்போய் வந்து அப்படியே கண்ணீர் வற்றி முடங்கினார்.

‘இவன் தான் என் வாழ்க்கை என்று நம்பினேன். என்னையே தந்தேன். ஆனால் எல்லாம் ஒரு ‘ஃபன்’ என்று கூறி விட்டான்; என்னை ஏமாளி ஆக்கி விட்டான். எனக்கு இனியும் வாழ்க்கை  எதற்கு?’ என்பது தான் அவள் எழுதிய துண்டு காகிதத்தில் கடைசி வரிகள். விசாரணை செய்த போலீஸ், உடனே மனோஜை கைது செய்து சிறையில் அடைத்தது. அவனும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

தந்தை சொன்ன வார்த்தை: ‘பேஸ்புக் கூடாது என்று தான் அவளுக்கு செல்போன், வீட்டில் கம்ப்யூட்டரில் நெட் இணைப்பு வாங்கி தரவில்லை. அதுவே அவள் உயிரை நான் அஞ்சியதற்கு  ஏற்ப பறித்து விட்டது’ என்று உடைந்த வார்த்தைகளை உதிர்த்தார்.

-அஷ்ரப்

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ரயில் போக்குவரத்து

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து அமெரிக்காவுக்கு மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் போக்குவரத்து தொடங்க சீனா திட்டமிட்டு உள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதி வழியாக 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை அமெரிக்காவுக்கு கடலுக்கு அடியில் ரயில் இருப்பு பாதைகளை அமைத்து, சைபீரியா மற்றும் அலாஸ்கா நீரிணைப்பு வழியாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக பறக்கும் ரயிலை விடுவதற்கு சீன பொறியியல் அகடமி திட்டமிட்டு உள்ளது. சீனாவில் இருந்து ரஷ்யா மற்றும் அலாஸ்கா வழியாக கடலுக்கு அடியில் 200 கிலோ மீட்டர் தூரம் தொடர் சுரங்க ரயில் பாதை அமைத்து, 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவை இணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இந்த அதிவேக ரயில்பாதை திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

அப்போது சீனாவில் இருந்து இரண்டு நாட்களில் அமெரிக்காவுக்கு சென்றுவிடலாம். அதற்கு முன்னோட்டமாக, தற்போது மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று சீன ரயில்வே தொழில்நுட்ப நிபுணர் வாங் மெங் சூ நேற்று பீஜிங்கில் கூறினார். அதேபோல், லண்டன் வழியாக பாரிஸ் மற்றும் பெர்லின் வழியாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கும், ஜெர்மனி வழியாக ஈரான் மற்றும் துருக்கிக்கும் ரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து திட்டங்களை சீனா திட்டமிட்டுள்ளது. மேலும் வியட்நாம் மற்றும் கம்போடியா வழியாக சீனாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் விதமாக சாலை மற்றும் ரயில் இருப்பு பாதை திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சீனாவையும் ஆப்ரிக்காவையும் இணைக்கும் ரயில் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

-அஷ்ரப்